search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "was identified"

    • வாகனத்தின் எண்ணை வைத்து எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்தனர்.
    • 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வந்தாய் என்று விசாரணை செய்தனர்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை. இந்த அணை பகுதியில் கடந்த 2 நாட்களாக இருசக்கர வாகனம் கேட்பாரற்று அங்கேயே இருந்தது.

    இதனை அந்தியூர் பகுதியில் உள்ள சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனை அடுத்து பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் அந்த வாகனத்தின் எண்ணை வைத்து எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்தனர்.

    அதில் கொங்காடை காலனி பகுதியைச் சேர்ந்த செல்வன் (26) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வத்திடம் எதற்காக இந்த வண்டியை 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வந்தாய் என்று விசாரணை செய்தனர்.

    அதற்கு மலை பாதையில் வரும் பொழுது வாகனம் பழுதாகி விட்டது. அதனை எடுத்து சென்று சரி செய்ய வேண்டும். அதனால் அங்கேயே நிறுத்தி வந்து விட்டேன் என்று பதில் அளித்துள்ளார்.

    இதனையடுத்து பர்கூர் போலீசார் அந்த வாகனத்தை மினி ஆட்டோவின் மூலம் ஏற்றி வரட்டு பள்ளம் செக் போஸ்ட் பகுதியில் கொண்டு சென்று இறக்கி வைத்து உள்ளார்கள். மேலும் வண்டியின் உரிமையாளரான செல்வத்திடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தார்கள்.

    இதனால் வரட்டு பள்ளம் அணை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் யாருடையது என்ற பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் கொல்லம்பாளையம் செல்லும் சாலையில் ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கே வைத்து இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் சத்தியமங்கலம் கோனமுலை அருகே உள்ள சென்னிமூப்பன்புதூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ரங்கம்மாள் (57) என்பது தெரிய வந்தது. ரங்கம்மாள் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது. அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் தெரிவித்தனர்.

    ×