search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wedding"

    • சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
    • ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், பாரதிராஜா,மணிரத்னம் ,விக்னேஷ் - நயன்தாரா, உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.

    இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.




    இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஏப்ரல் 15 - ந்தேதி அன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி திருமண பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார். மேலும் திருமண விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடு செய்தார்




    இந்நிலையில் இன்று (15- ந்தேதி) சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



    மேலும் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குனர்கள் பாரதிராஜா,மணிரத்னம் -சுஹாசினி, கே. பாக்யராஜ்,பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி - ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன் - அனுவர்தன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ரவி குமார்,




    நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் நாசர் - கமிலா நாசர், ஜீவா,சித்தார்த், நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஜெயந்திலால் காடா, ஏ.எம்.ரத்னம்,தில் ராஜு, ஐசரி கணேஷ்,ராஜசேகர்,திருப்பதி பிரசாத், இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.




    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர்கள் லிங்குசாமி,அட்லி, வசந்த பாலன், நடிகர் பரத், ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
    • "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்து உள்ளார்.

    நடிகர் சித்தார்த் 'ஆயுத எழுத்து' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பாய்ஸ், அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்து முக்கிய நடிகரானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'சித்தா' படம் ரசிகர்களிட நல்ல வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்தார். இவர் செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது திருமணம் அல்ல, நிச்சயதார்த்தம் என்று இருவரும் பதில் அளித்து உள்ளனர். இது வைரலாக பரவியது.

    இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் சித்தார்த்- அதிதி ஜோடிக்கு இணைய தளத்தில் வாழ்த்துக்கள் கூறி உள்ளார். அதில் "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' மனமாற வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரத்னா ஜெயின், மணமகன்-மணமகளை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்தார்.
    • கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.

    ஜோலார்பேட்டை:

    பெங்களூரைச் சேர்ந்தவர் ரத்னாஜெயின் (வயது 50). இவருடைய மகனுக்கு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமணம் நடக்க உள்ளது.

    இதில் ரத்னா ஜெயின், மணமகன்-மணமகளை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்தார்.

    அதன்படி ஹெலிகாப்டர் திடீரென ஏலகிரி மலையில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வந்து தரை இறங்கியது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், ஹெலிகாப்டரை காண அந்த இடத்தில் குவிந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டரை தரை இறங்கியது குறித்து விளக்கம் கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஏலகிரி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதிஇன்றி ஹெலிகாப்டர் தரை இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.

    இது குறித்து அந்த தனியார் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தினோம்.

    அதன்படி கல்லூரி முதல்வர் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார். இனிமேல் ஹெலிகாப்டரை தரை இறங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட போலீசாரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் முகேஷ் குமார் இடம் பெற்றிருந்தார்.
    • முதல் 2 போட்டிகளில் விளையாடிய அவர் திருமணத்திற்காக 3-வது போட்டியில் இருந்து விலகினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார். இவர் இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டி, 7 டி20 போட்டி, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

    முகேஷ் குமார் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றிருந்தார். முதல் 2 போட்டிகளில் விளையாடிய அவர் திருமணத்திற்காக 3-வது போட்டியில் இருந்து விலகினார்.


    இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலியான திவ்யா சிங்கை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • உமாபதி மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் உமாபதி (வயது 60). இவரது மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக 10 பவுன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருமண மண்டபத்தில் வைத்து விட்டு நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

    பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்து மணமகள் அறைக்கு சென்று பார்த்தபோது 10 பவுன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி நகை மற்றும் பணத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு 5 லட்சம் ஆகும். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெரம்பலூரில் 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    • முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா நடத்திவைத்தார்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் சீர்திருத்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பிரபாகரன் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா, நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலையில், ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமத்துவம் வர வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டுவந்தார். தி.மு.க. ஆட்சியில் நரிக்குறவர் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வல்லபன், பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், மதியழகன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழங்குடியினர் மாநில தலைவர் அதியமான் நன்றி கூறினார்.

    • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சியை நடைபெற்றது.
    • தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக பல்லாண்டு காலம் மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

    உடுமலை:

    உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 6 இணையர்களுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமயஅறநிலையத் துறை சார்பில் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் மீட்பு மற்றும் அன்னதான திட்டம் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மற்றும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.

    திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய செயல். அதை எல்லோராலும் சிறப்பாக செயல்படுத்த முடியாத சமயங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இதுபோன்ற திட்டங்கள் மூலம் திருமணம் நடத்தி வைத்து அவர்களுக்கு தேவையான சீர்வரிசைகள் வழங்கி ஒரு சிறப்பான வாழ்க்கைக்கு அவர்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    திருமண நிகழ்ச்சியில் மணவிழா காணும் 6 இணையர்களை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியும், சந்தோஷசமும் அடைகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாகவும், தமிழ்நாடு அரசு சார்பாகவும் பல்லாண்டு காலம் மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

    அதே போல மணமக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று ஒற்றுமையோடும், விட்டுக் கொடுத்து சிறப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அரசுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும், உங்கள் திருமணத்தை நடத்தி வைத்த எங்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக உங்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் 6 மணமக்களுக்கும் தலா சீர்வரிசை ப்பொருட்களாக, திருமங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், 1 பீரோ,1 கட்டில், மெத்தை, 2 தலையணை, 1 பாய், 2 கைக்கடிகாரம், 1 மிக்சி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் என மொத்தம் ரூ.30,000 மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பொருளாளர் முபாரக் அலி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை நகர மன்றத் தலைவர் மத்தீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார்,எஸ்.கே. தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், பாபு,பிஏபி., பாசனசங்கத் தலைவர் மொடக்குப்பட்டி ரவி, உடுமலை தாசில்தார் கண்ணாமணி உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உள்ள கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா இன்று நடைபெற்றது.
    • மணமக்களுக்கு பீரோ, கட்டில் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உள்ள கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா இன்று நடைபெற்றது.

    நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு பீரோ, கட்டில் மற்றும் சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கவிதா பிரிய தர்ஷினி, உதவி ஆணையாளர் கவிதா செயல் அலுவலர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில், பாளையங்கோட்டை பிரசன்ன விநா யகர் கோவில் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள 4 கோவில்களில் 5 ஜோடி களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

    • உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
    • பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    பாலக்காடு :

    திருமண பந்தம் என்பது...

    மனித வாழ்க்கையின் புதிய அத்தியாயம்...

    இதுவே....ஒருமனமாய்...உலாவந்த மனங்களை இருமனமாய் இணைய வைக்கிறது. இணை பிரியாமல் வாழையடி வாழையாய்...வாழ்க்கையை வரலாறாக மாற்றுகிறது...

    ஆம்...திருமணத்தன்று...அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது வழக்கம். அம்மி மிதிப்பது என்பது ஒரு சடங்கு. மணமகன் என்பவர், மணமகளின் வலக்கால் கட்டை விரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைத்து, இந்த கல்லைப்போல் உறுதியாக மனம் கலங்காமல் இருக்க வேண்டும் என்பதே இதற்கான ஐதீகம்.

    சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. வசிஷ்டர் முதலான சப்தரிஷிகளே நட்சத்திரங்களாக திகழ்கின்றனர் என்பது ஐதீகம்...

    இதில்....வசிஷ்டர் என்கிற நட்சத்திரத்துடன் இணைந்தாற்போல் இருக்கும் நட்சத்திரமே அருந்ததி. வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல், இணைந்தே இருக்கவேண்டும் என்கிற கருத்தை உணர்த்துவதே அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி.

    இந்த சடங்குகள் எல்லாம் ஐதீகம் என்கிற முறையில் நடைமுறையில் இருக்கின்றது...

    ஆனால் அம்மி...அருந்ததியை தாண்டி...இருமனங்களாய்... ஓட்டிக்கொண்ட தம்பதிகளுக்கு வினோத முறையில் ஒரு சடங்கு நடந்தது.

    ஆம்...புதுமண தம்பதிகள் இருவரது தலைகளையும் முட்ட வைக்கும் வினோத சடங்கு ஒன்று நடந்துள்ளது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. பாலக்காடு மாவட்டம் பல்லசேனா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜலஷா என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பல்லசேனாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. பின்னர் உறவினர்கள் மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு புகுந்த வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக, மணமக்களை வாசல்படி அருகே நிற்குமாறு கூறினர். அப்போது உறவினர் ஒருவர் சச்சின், ஜலஷா இருவரது தலையை பிடித்து முட்ட வைத்தார். இதில் வலி தாங்க முடியாமல் மணமகள் அழுதார். அதன் பின்னர் மணமக்களை வீட்டுக்குள் செல்ல அனுமதித்தனர்.

    இவ்வாறு செய்வது புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என நம்புவதாகவும், அதனால் தான் மணமகளை அழ வைத்து வீட்டுக்குள் அனுப்புகிறோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கிராமத்தில் திருமணமான பின்னர் இதுபோன்ற வினோத சடங்கு இருப்பதாக வயதானவர்கள் கூறுகின்றனர். இப்படி ஒரு சம்பிரதாயம் உள்ளது எனக்கே தெரியாது என மணமகன் சச்சின் தெரிவித்தார்.

    முதன் முதலாக மணமகன் வீட்டுக்கு வரும் மணமகள் அழுதபடி வருவதால் குடும்பம் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    கேரளாவில் 98 சதவீதம் பேர் படித்தவர்கள். அப்படி இருக்க, 21-ம் நூற்றாண்டிலும் பழைய சம்பிரதாயம் தொடர்ந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார், மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (வயது 22). பட்டப் படிப்பு படித்த இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி திருநங்கை.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அடிக்கடி அவர்கள் சந்திக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது.

    இதனால் இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

    இதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வேமுலவாடா கோவிலுக்கு சென்றனர். அங்கு வைத்து இருவரும் சாமி சன்னதியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீநிவாஸ் பிங்கி கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    ஆட்டோ டிரைவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி 99 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. எம்.சி.சண்முகையா, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தமிழகத்தில் தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் தலைநிமிர முடியாது என்று சொல்லும் அளவுக்கு உழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவு வழங்கி உள்ளார். கலைஞர் பிறந்தநாள் விழாவை மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக கொண்டாடினோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.  ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். 

    மாவட்ட கழகம் சார்பில் 99 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தேதி கொடுத்த உடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதே போன்று இளைஞர் அணி ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 300 பேருக்கு உணவு மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

    மேலும் இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது, எந்த வகையில், கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது என்பது தெரியாத நிலை உள்ளது. ஆகையால் இளைஞர்கள் இயக்கத்தின் வரலாறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் மூத்த முன்னோடிகளை அழைத்து வந்து மாணவர் அணி, மகளிர் அணி, தொழில்நுட்ப அணி, இளைஞர் அணிக்கு விளக்கி கூற உள்ளோம். 

    கொடி கட்டுவது, ஊர்வலம் செல்வது மட்டும் இயக்கம் அல்ல. ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையின மக்கள் நலனுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மக்கள் பணி மூலம் தி.மு.க.வை எவராலும் வெல்ல முடியாது என்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

    கூட்டத்தில் கலைஞரின் 99-வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்கள், தாய்மார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் கழக உடன்பிறப்புகளிடமும் நன்மதிப்பை பெற்று மக்கள் தொண்டாற்றி வரும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் சேர்க்க வேண்டும், திராவிட மாடல் ஆட்சி முறை பற்றிய பயிற்சி பட்டறை மாவட்டம் முழுவதும் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, ஜெயக்குமார் ரூபன், மாவட்்ட துணை செயலாளர்கள் ஆறுமுக பெருமாள், முகமது அப்துல்காதர், பொருளாளர் ராமநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், வக்கீல் அணி அமைப்பாளர் ஜெபராஜ், மாணவர் அணி அருண் குமார், மகளிர் அணி ஜெசி பொன்ராணி, விவசாய அணி ஆஸ்கர், ஆதிதிராவிடர் நலக்குழு டி.டி.சி.ராஜேந்திரன்,ஓன்றிய செயலாளர் ஜெயக்கொடி,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.
    ×