search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vellore suicide"

    • ஒரே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர், இளம்பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • 2 பேர் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை வாணியம்பாடியான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அஜித்குமார் (வயது 26). பால் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று இரவு செட்டிகுப்பம் காளியம்மன் கோவில் குட்டை அருகே அஜித்குமாரின் மோட்டார் சைக்கிள் செருப்பு, செல்போன் பர்ஸ் உள்ளிட்டவை கிடந்தது.

    இதனை கண்டதும் கிராம மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 15 அடி ஆழமுள்ள குட்டையில் இறங்கி தேடினர்.

    2 மணி நேர தேடுதலுக்கு பின் அஜித்குமார் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் ரீட்டா (22) காட்பாடியில் உள்ள கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். ரீட்டா நெல்லூர் பேட்டை ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினராகவும் இருந்தார்.

    இந்நிலையில் ரீட்டா நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஒரே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர், இளம்பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 2 பேர் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே ஊர்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள பூண்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55) விவசாயி. இவருக்கும் ஊர்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த சந்திரன் நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் கல்லூரி மாணவி தற்கொலையில் காதலன் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் மகள் ஷாலினி (வயது 18). இவர் வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஷாலினியும், ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்த நகை அடகுகடை வியாபாரி பூபதி மகன் அருண் (20) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதலுக்கு காதலன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஷாலினியிடம் பேசுவதை காதலன் அருண் தவிர்த்தார். மனமுடைந்த ஷாலினி கடந்த 3-ந் தேதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதையறிந்த காதலன் தலைமறைவாகிவிட்டார். ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை தேடி வந்தனர்.

    26 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு நேற்றிரவு காதலன் அருண் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×