search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadapalani murugar"

    • வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநி ஆண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது.
    • அதன்பால் ஆர்வம் ஏற்பட்டு நாயக்கர் அதனையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று விட்டார்.

    வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநி ஆண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது.

    அதன்பால் ஆர்வம் ஏற்பட்டு நாயக்கர் அதனையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று விட்டார்.

    அப்படத்தை விலைக்கு வாங்கிக் கொள்வதற்கு அவர் கையில் பொருள் ஏதுமில்லை.

    ஆயினும் அவர் அதனைப் பெறவேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.

    அன்றிரவு அந்தப் படத்தை நாயகருக்கு தரும்படி கடைக்காரர் கனவிலும், அதைப் பெற்றுக் கொள்ளும்படி நாயக்கர் கனவிலும் தோன்றி ஆண்டவர் அருள் புரிந்தார்.

    மறுநாள் நாயகரைக் கண்டதும் கடைக்காரர் படத்திற்குப் பூமாலை அணிவித்து மிகவும் அன்புடன், நாயகரிடம் தாமே வலிந்து வந்து கொடுத்து வணங்கி மகிழ்ந்தார்.

    நாயக்கர் அந்தப் படத்தைப் பெருஞ்செல்வமாக மதித்துப் போற்றி எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். 

    • தமது குறிமேடையில் அதனை வைத்து, அதனைப் பழனி ஆண்டவர் திருக்கோவிலாக மாற்றி அமைத்தார்.
    • அன்று முதல் அண்ணாசாமித்தம்பிரான் என்னும் பெயர் அமைவதாயிற்று.

    தமது குறிமேடையில் அதனை வைத்து, அதனைப் பழனி ஆண்டவர் திருக்கோவிலாக மாற்றி அமைத்தார்.

    சிறிய கீற்றுக் கொட்டகை ஒன்று போட்டு தனது குடும்பத்தை விட்டு விலகி துறவு நெறி மேற்கொண்டு, காவி உடை அணிந்து ஆண்டவர் சன்னதியிலேயே இருக்க தொடங்கினார்.

    குறிகேட்க வரும் அன்பர்கள் மனமுவந்து கொடுக்கும் காணிக்கையை பெற்றுக் கொண்டு ஆண்டவருக்கு வழிபாடு" முதலியவற்றைச் சிறப்புற நடத்தி வந்தார்.

    அன்று முதல் அண்ணாசாமித்தம்பிரான் என்னும் பெயர் அமைவதாயிற்று.

    அண்ணாசாமித் தம்பிரானின் அரிய பக்தியையும், குறி சொல்லும் சிறப்பையும் கேள்வியுற்று அவரை நாடிய அன்பர்கள் பற்பலர்.

    அவர்களுள் தேனாம்பேட்டையில் வாழ்ந்து வந்த ரத்தினசாமிச்செட்டியார் என்பவரும் ஒருவர்.

    அவர் ஆயிரம் விளக்குப்பகுதியில் ஒரு மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்.

    ரத்தினசாமி செட்டியார் அண்ணாசாமி நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க வடபழனி கோவிலை உருவாக்கியது பற்றி அடுத்த பதிவில் காணலாம்

    • அப்போது அவருக்கு மேலும் மேலும் பழனிப் பரமன்பால் பக்தி ஓங்கி வளர்ந்து வந்தது.
    • ஒரு நாள் அவர் ஞானதண்டாயுதபாணியை மலைமேற் சென்று தரிசித்துக் கொண்டு படிகளில் கீழிறங்கி வந்தார்.

     இந்த நிலையில் நாயகருக்கு பழனி செல்ல வேண்டும் என்னும் ஆர்வம் மிகவும் பெருகி வந்தது.

    அந்நாளில் ரெயில் முதலிய வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தன.

    பெரும்பாலும் கால் நடையாகவே யாத்திரிகர்கள் தலங்களுக்குச் செல்வது வழக்கம், நாயக்கர் பழனி சென்று முருகனை வழிபடும் பேரார்வம் மேலிட்டு ஒரு நாள் திடீரென்று புறப்பட்டு விட்டார்.

    கால் நடையாகவே பல தலங்களையும் தரிசித்து பழனி சென்று அடைந்தார்.

    அங்கு ஞான தண்டாயுதபாணியைத் தரிசித்து, மிகுந்த அன்புடன் வலம் வந்து வழிபட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

    பழனியிலேயே சில நாட்கள் பக்திப்பெருக்குடன் தங்கி மகிழ்ந்து இன்புற்றார்.

    அப்போது அவருக்கு மேலும் மேலும் பழனிப் பரமன்பால் பக்தி ஓங்கி வளர்ந்து வந்தது.

    ஒரு நாள் அவர் ஞானதண்டாயுதபாணியை மலைமேற் சென்று தரிசித்துக் கொண்டு படிகளில் கீழிறங்கி வந்தார். 

    • ஆவேசமுற்ற நிலையில் அவர் எவருக்கு எதைச் சொன்னாலும், சொன்னது சொன்னபடியே பலித்து நடந்து வந்தது.
    • இதனால் ஏராளமான மக்கள், திரள் திரளாக அவர் இல்லத்துக்கு வரத் தொடங்கி விட்டனர்.

    முருக பக்தியில் மிகவும் உறுகி- வளர்ந்து சிறந்த பேரன்பராகிய நாயக்கர், அவ்வழிபாட்டு நிகழ்ச்சிகளின் போது தம்மை மறந்த நிலையில், ஒருவகை உணர்ச்சிப் பெருக்கு (ஆவேசம்) எய்தி விடுவது வழக்கம்.

    அப்போது அன்பர்கள் அவரிடம் தமது குறைகளை - - முருகனிடம் கூறுவது போலக் கூறி அவைகள் தீரும் வண்ணம் அருள்புரியுமாறு வேண்டுகோள் செய்வர்.

    நாயகரும் தம்மை மறந்து ஆவேச - நிலையில் அன்பர்களின் வினாக்களுக்கு ஏற்ற விடைகளையும் தகுந்த விளக்கங்களையும், தெரிவிப்பார்.

    நாளடைவில் நாயகரின் இல்லம் பண்டைய கிரேக்க நாட்டில், டெல்பி நகரில் இருந்த புகழ் ஓங்கியதொரு குறி மேடை போன்று, புகழ் மிக்கதொரு குறி மேடை ஆகிவிட்டது.

    ஆவேசமுற்ற நிலையில் அவர் எவருக்கு எதைச் சொன்னாலும், சொன்னது சொன்னபடியே பலித்து நடந்து வந்தது.

    இதனால் ஏராளமான மக்கள், திரள் திரளாக அவர் இல்லத்துக்கு வரத் தொடங்கி விட்டனர்.

    கோடம்பாக்கம் குறிமேடை எங்கும் புகழ் பெறுவதாயிற்று.

    ஏழை - எளியோர், உயர்ந்தோர் - தாழ்ந்தோர், கற்றார்,கற்காதவர், செல்வர், பதவியர் அனைவரும் அங்கு வந்து தத்தம் குறைகள் தீரக் குறிகள் கேட்டு நலம் பெற்று மகிழலாயினர்.

    • சிலர் காலை மாலைகளில் அவர் செய்யும் வழிபாடுகளில் அன்புடன் கலந்து கொள்வர்.
    • திங்கட்கிழமை வெள்ளிக்கிழமைகள் தோறும் முருகனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப் “படலாயின.

    இங்ஙனம் திருத்தணிகை வழிபாட்டை முடித்துக் கொண்டு மறுநாள் அவர் சென்னை வந்து சேர்ந்தார்.

    திருத்தணிகையில் இருந்து கொண்டு வந்த படத்தைத் தமது வீட்டில் வைத்து வழிபாடு செய்த நாயகருக்கு அதற்குப்பின் வயிற்றுவலி ஏற்படவேயில்லை. அவர் தம் நோய் அறவே அகன்றொழிந்தது.

    சில நாட்களில் அவர் தம் நாக்கும் நன்கு வளர்ந்து விட்டது.

    அவர்தம் அன்பின் பெருக்கையும், பக்தி உணர்வையும் மனத்திண்மையையும் அறிந்த அன்பர் பலர் அவரிடம் வந்து பேசுவதுடன் தமது குறைகளையும் கூறி, அவை தீரும் வழிவகைகளையும் கேட்கத் தொடங்கலாயினர்.

    நாயக்கர், அவர்களுக்கெல்லாம் ஒன்றும் விடை கூற இயலாத நிலையில், முருகனை வழிபடும்படி அறிவுறுத்தி அனுப்பிவிடுவார்.

    சிலர் காலை மாலைகளில் அவர் செய்யும் வழிபாடுகளில் அன்புடன் கலந்து கொள்வர்.

    திங்கட்கிழமை வெள்ளிக்கிழமைகள் தோறும் முருகனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப் "படலாயின.

    அன்பர்கள் அதில் கலந்து கொண்டதுடன் அவை சிறப்புற நிகழ மனமுவந்து உதவிகளும் செய்து வந்தனர்.

    வழிபாடும் பாராயணமும் இன்னிசைப் பாடல்களும் அப்போது நிகழும்.

    • பழனிச் சாது தெரிவித்தது போன்று, புதுமையான காணிக்கை செலுத்திய மனநிறைவு அவருக்கு ஏற்பட்டது.
    • அப்போது அங்கே இருந்த மக்கள் அண்ணாசாமியாரின் செய்கையைக் கண்டு மிகவும் வியப்புற்றனர்.

    முருகனைப் பாடாத நாக்கினைப் பெற்ற நாம் நமது நாக்கையே அவன் முன் ஏன் பலியிட்டுக் காணிக்கை செலுத்தக் கூடாது? என்ற எண்ணம் தோன்றியது.

    உடனே அவர் சிறிதும் தாமதிக்காமலும், தயங்காமலும் 'முருகா! முருகா!' எனக் கூவி அழைத்துத் தமது சாவிக்கொத்தில் இருந்த சிறு கத்தியை எடுத்து நாக்கை அறிந்து ஓர் இலையில் ஏந்திப் பலி பீடத்தின் அடியில் வைத்து, அடியற்ற மரம்போலத் தணிகை அண்ணலின் முன் வீழ்ந்து வணங்கினார்.

    பழனிச் சாது தெரிவித்தது போன்று, புதுமையான காணிக்கை செலுத்திய மனநிறைவு அவருக்கு ஏற்பட்டது.

    அப்போது அங்கே இருந்த மக்கள் அண்ணாசாமியாரின் செய்கையைக் கண்டு மிகவும் வியப்புற்றனர்.

    அச்சமும் அன்பும் பக்தியும் மதிப்பும் கலந்த ஒருவகை உணர்ச்சி அவர்களை ஆட்கொண்டது.

    அண்ணாசாமியாரை அணுகி நின்று, அவர் யார்? எந்த ஊர்? ஏன் அவர் தமது நாக்கை அறுத்துக் கொண்டார்? என்றெல்லாம் அறிந்து கொள்ள, மக்கள் ஆவல் கொண்டனர்.

    ஆனால் எப்படி அவரைக் கேட்பது?அவர் தம் நாக்கை அறுத்துக் கொண்டு தம்மை மறந்த நிலையில் இருக்கின்றாரே! என்று மயங்கினர்.

    நாக்கு துண்டிக்கப்பட்டதால் குருதி பெருக மயங்கிக் கிடந்த நாயகரின் முகத்தில், அன்பர்கள் சிலர் தண்ணீர் தெளித்துப் பணிவிடைகள் செய்தனர்.

    நீண்ட நேரம் கழித்து நாயக்கர் நினைவு பெற்றுக் கண்விழித்தார். அன்பர்கள் துணை செய்ய மெல்ல எழுந்து நின்றார். சிறிது தண்ணீர் பருகினார்.

    குளிர்ந்த நீர் பட்டபின் ரத்தம் அறவே நின்று விட்டது.

    வாய் பேச வராத நிலையிலும் நாயக்கர் முருகா!முருகா! என்று குழறிக்குழறி முணுமுணுத்தார். கோவிலை வலம் வந்தார்!

    அருகில் இருந்த - படக்கடையில் முருகன் படம் ஒன்றைப் பார்த்து வணங்கினார்.

    யாரோ ஒர் அன்பர் உடனே அப்படத்தை வாங்கி அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

    நம் அண்ணாசாமியார் தமக்கு அந்த முருகன் படம் கிடைத்ததைப் பெரும்பேறு - என்று கருதி அதைத் தம் தலைமேல் வைத்துக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடி இன்புற்றார்.

    • திருக்கோவில் அமைதியுற்றது. நாயக்கர் உணர்வு எய்திக் கண்விழித்துப் பலி பீடத்தைக் கண்டார்.
    • அருகில் இருந்த காணிக்கை உண்டியலையும் கண்களால் நோக்கினார்.

    அப்போது அவருக்குப் பழனியில் இருந்து வந்த சாது முன்னர் தெரிவித்தபடி, திருத்தணிகைக்குச் செல்ல வேண்டும் என்கிற விருப்பமும், அங்குச் சென்று ஏதேனும் காணிக்கை செலுத்தினால் தான் தம் நோய் தீரப்பெறும் என்ற கருத்தும், பெரிதாக நிகழ்ந்து வந்தன.

    முருகனை வழிபடுகிற போது அவரை நாவாரப் பாடி மகிழ வேண்டும் என்கிற விருப்பமும் அண்ணாசாமி நாயகருக்கு உண்டாயிற்று.

    இளமையில் கல்வியறிவு பெறாமல் போனதை எண்ணி எண்ணி வருந்தினார்.

    திருப்போருரில் அடியார்கள் திருப்புகழ் பாடி முருகனை வழிபட்ட காட்சிகளையும், அங்கங்கே அன்பர்கள் கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலிவெண்பா, வேல் வகுப்பு, மயில் விருத்தம், திருப்போரூர்ச் சன்னிதிமுறை முதலியவற்றைப் பாராயணம் செய்து கொண்டு அமர்ந்திருந்த அழகையும், நினைந்து நினைந்து ஏங்கினார்.

    அடுத்த கார்த்திகையன்று நாயக்கர் திருத்தணிகைக்குச் சென்றார் அடியார்களின் பாராயணங்களையும் பாடல்களையும் கேட்டுக் கொண்டே தம்மைமறந்த நிலையில் அவர்களுடன் திருமலை திருக்கோவிலை அடைந்தார்.

    கொடி மரத்தின் எதிரில் நின்று மேலும் மேலும் வரிசையாகத் திரண்டு வரும் அடியார்களின் ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும் விம்மிதம் எய்தினார்.

    நெடுநேரம் ஆகியது. இரவு மணி ஒன்பதும் நெருங்கியது. அடியார் திரள் மெல்லமெல்லக் குறைந்தது.

    திருக்கோவில் அமைதியுற்றது. நாயக்கர் உணர்வு எய்திக் கண்விழித்துப் பலி பீடத்தைக் கண்டார்.

    அருகில் இருந்த காணிக்கை உண்டியலையும் கண்களால் நோக்கினார்.

    அவருக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு தோன்றியது.

    • திருப்போரூர் சென்று தொழுதும் வயிற்று வலி தீர்வதாக இல்லை.
    • வீட்டில் உறவினர்கள் வருந்திக் கவலைப்பட்டனர்.

    திருப்போரூர் சென்று தொழுதும் வயிற்று வலி தீர்வதாக இல்லை. வீட்டில் உறவினர்கள் வருந்திக் கவலைப்பட்டனர்.

    இவ்வளவு வயிற்று வலியுடன், ஏன் திருப்போரூருக்கு நடந்து சென்று அல்லல் படுகிறீர்கள்?'' என்றும் அன்பால் தடுத்தனர்.

    அவன் விட்ட வழி ஆகட்டும். அவனையன்றி நமக்கு வேறு துணை இல்லை.

    இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும், யான் திருப்போரூர் சென்று முருகனை வழிபட்டே தீருவேன்'' என்று கூறி, மூன்றாம் முறையும் அண்ணாசாமியார் திருப்போரூர் சென்று முருகனைப் பணிந்து வழிபட்டார்.

    வழிபாட்டை முடித்துக் கொண்டு சிதம்பர சுவாமிகள் சன்னதியில் எதிரில் இரவு படுத்துக் கொண்டார்.

    அப்போது கனவில் ஒரு பெரியவர் தோன்றி, ''உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கிறபொழுது, நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு அல்லல்பட்டு ஓடி வருகின்றாய்?'' அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே?'' என்று கூறக் கேட்டு, உறக்கத்தில் இருந்து திடீரென விழித்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.

    செய்தியை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிவித்து, அன்று முதல் தம் வீட்டிலேயே காலை மாலை இருவேளைகளிலும், முருகனை நினைத்து வழிபாடு செய்து வந்தார்.

    • வசதி உள்ளவர்கள் படகுகளில் செல்வார்கள். மற்றவர்கள் நடந்தேதான் செல்ல வேண்டும்.
    • படகுகளும் மிகுதியாகப் போவது இல்லை. வழியில் கள்வர்களின் தொல்லைகளும் இருக்கும்.

    அந்த காலத்தில் சென்னையில் இருந்து திருப்போரூருக்கு செல்வது என்பது எளிதன்று.

    வசதி உள்ளவர்கள் படகுகளில் செல்வார்கள். மற்றவர்கள் நடந்தேதான் செல்ல வேண்டும்.

    படகுகளும் மிகுதியாகப் போவது இல்லை. வழியில் கள்வர்களின் தொல்லைகளும் இருக்கும்.

    எப்படிப்போனாலும் குறைந்தது இரண்டு நாளாவது ஆகும்.

    அவ்வளவாக வசதி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த நாயக்கர், நடந்தே திருப்போரூருக்கு சென்றார்.

    கள்ளர்கள் நாயகரை வழிமறித்து அவரிடம் இருந்த கட்டுச்சோறு, துணி, சில்லரைக் காசுகள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு விட்டனர்.

    ஆயினும் நாயக்கர் மனம் தளராமல் 'ஏகாங்கி'யாகவே திருப்போரூர் சென்று முருகனை வழிபட்டுத் திரும்பினார்.

    அடுத்த கிருத்திகைக்கு திருப்போரூர் செல்ல புறப்பட்ட போது பெருமழை பெய்து இடையில் உள்ள ஆற்றில் வெள்ளம் மிகுந்து, நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

    படகில் சென்றவர்களும் வெள்ளத்தை கண்டு திரும்பி விட்டனர்.

    ஆனால் அண்ணாசாமி நாயக்கர் மட்டும் மனம் சிறிதும் கலங்காமல், திடமான சிந்தனையுடன் வெள்ளத்தை நீந்திக் கடந்து திருப்போரூர் சென்று வழிபட்டே திரும்பினார்.

    ஊர் மக்கள் அவருடைய பக்தியின் பெருக்கையும், உள்ளத்திண்மையையும் வியந்து புகழ்ந்தனர்.

    • எவ்வளவோ மருத்துவம் செய்தும் வயிற்றுவலி நீங்கவில்லை.
    • தல யாத்திரை வந்த சாது ஒருவரை, வியாக்கிரபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்ற போது கண்டார்.

    உற்ற வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு புதல்வர்களை பெற்ற இவர், வயிற்று வலி நோயால் மிகவும் துன்பமுற்று வருந்தி வந்தார்.

    எவ்வளவோ மருத்துவம் செய்தும் வயிற்றுவலி நீங்கவில்லை.

    ஒரு நாள் பழனியில் இருந்து தல யாத்திரையாக வந்த சாது ஒருவரை, வியாக்கிரபுரீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற போது கண்டார்.

    மிகவும் அருள்நோக்கு உடையவராகக் காணப்பட்ட அச்சாதுவை வணங்கி தமது குறையை சொல்லி, அது தீரும் வழி ஏதேனும் ஒன்றைக் கூறுமாறு வேண்டிக் கேட்டார் அண்ணாசாமி நாயக்கர்.

    அதற்கு அந்த சாது, ''வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை'' என்று கூறி,

    ''நீ கிருத்திகை தோறும் தவறாது திருப்போரூர் சென்று வழிபட்டு வா, திருத்தணிகை நாதனுக்கு ஏதேனும் புது முறையான காணிக்கை செலுத்து, முடிந்த போது பழனிக்குப் போய் தரிசனம் செய், உன் வயிற்று வலி தீரும்'' என்று அருள் உரை கூறினார்.

    அன்று முதல் அண்ணாசாமி நாயக்கர் முருக பக்தியில் தலை நின்றவராகி, அடுத்த கிருத்திகை முதல் திருப்போரூருக்கு தவறாது சென்று வழிபட்டார்.

    • ஆனால் அவருக்கு படிப்பில் கருத்து செலுத்த முடியவில்லை. நாளடைவில் பள்ளிக்கு செல்வதையும் நிறுத்திக் கொண்டார்.
    • அவருக்கு இறை அன்பு மட்டும் மிகையாக வளர்ந்து வந்தது.

    ''தவநிலையோர் தெய்வம்'' என விளங்கும் பழனி ஆண்டவர், சென்னையில் ஒரு பகுதியாகிய கோடம்பாக்கத்தில் எழுந்தருளவும்,

    வடபழனிக் கோவில் மாண்புற ஏற்படவும், காரணங்களாக விளங்கிய தவப்பெருஞ் சான்றோர்கள் முறையே

    ஸ்ரீ அண்ணாசாமி நாயக்கர், ஸ்ரீ ரத்தினசாமிச் செட்டியார், பாக்கிய லிங்கத் தம்பிரான் என்பவர்கள் ஆவர்.

    ஸ்ரீ அண்ணாசாமி நாயக்கர்

    இப்போது வடபழனி ஆண்டவர் கோவில் உள்ள இடத்தில் இன்றைக்குச் சற்று ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்

    சாலி கிராமம் என்னும் பகுதியில், அண்ணாசாமி நாயக்கர் என்பவருடைய வீடு இருந்தது.

    அவருடைய தாயார், தகப்பனார் பெயர்கள் தெரியவில்லை.

    இளமையிலேயே அவர் அருள் நாட்டமும் இனிய குணங்களும், எவரிடமும் பணிவுடன் இன்சொல் பேசும் இயல்பும் உடையவராக இருந்தார்.

    பெற்றோர்கள் அவரை வியாக்கிரபுரீஸ்வரர் கோவிலின் அருகில் குடியிருந்த சாம்பசிவம் பிள்ளை என்னும் தமிழ் அறிஞர் ஒருவரிடம் அனுப்பிக் கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்.

    ஆனால் அவருக்கு படிப்பில் கருத்து செலுத்த முடியவில்லை. நாளடைவில் பள்ளிக்கு செல்வதையும் நிறுத்திக் கொண்டார்.

    அவருக்கு இறை அன்பு மட்டும் மிகையாக வளர்ந்து வந்தது.

    ×