search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruporur"

    • திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.
    • திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருத்தணி:

    பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் திருத்தணி கோவிலுக்கு தற்போது வரும் பக்கதர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்ந நிலையில் இன்று வைகாசி மாதத்தில் வரும் முதல் சுப முகூர்த்த நாள் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

    மேலும் இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. திருமணகோஷ்டி மற்றும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.

    புதுமணத்தம்பதிகள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்போரூர்

    இதேபோல் திருப்போரூர் முருகன் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சுமார் 50 திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    திருமண கோஷ்டியினர் வந்த வாகனங்களால் திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×