search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tata Nano"

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைந்த நானோ காரின் விற்பனை 2020 ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. #Tatamotors #nano
    உலகின் விலை குறைந்த கார் மாடலாக டாடா நானோ அறிமுகமானது. இந்தியாவில் பத்து ஆண்டுகளாக விற்பனையாகி வரும் டாடா நானோ விற்பனை விரைவில் நிறுத்தப்படுகிறது.

    நானோ காரின் உற்பத்தி மற்றும் விற்பனையை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்த இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களில் வழங்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு பெரும் முதலீடு தேவைப்படும் என்பதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

    2009 ஆம் ஆண்டு நான்கு அல்லது ஐந்து கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாக நானோ கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் நானோ வெறும் ரூ.1 லட்சம் விலையில் உலகின் விலை குறைந்த கார் மாடலாக இருந்தது.


    டாடா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாடாவின் முயற்சியால் நானோ கார் உருவானது. இந்தியாவில் பெரும்பாலானோர் வாங்கும் படி பட்ஜெட் விலையிலான கார் ஒன்றை வெளியிட அவர் விரும்பினார். இந்தியாவில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அவற்றுக்கு மாற்றாக புதிய நானோ காரை வாங்குவர் என ரத்தன் டாடா நம்பினார்.

    பின் பொறியாளர்களின் கடும் முயற்சியில் உருவான டாடா நானோ உலகின் விலை குறைந்த கார் என்ற பெருமையை பெற்றது. எனினும், காரின் பாதுகாப்பு குறித்து அதிகளவு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில நானோ கார்களின் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. துவக்கத்தில் நானோ கார் மாதம் வெறும் 100 யூனிட்களே விற்பனையானது.

    இதுகுறித்து டாடா செய்தி தொடர்பாளர் கூறும் போது, அடுத்த ஆண்டு முதல் நானோ கார் பாதுகாப்பு விதிமுறைகள் எதிர்கொள்ள இருப்பதால் இதன் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவித்தார். #Tatamotors #nano
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #TataMotors



    இந்தியாவில் டாடா நானோ காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தியாவின் விலை குறைந்த கார் என்ற வகையில் பல்வேறு பொறியியல் சவால்கள் மற்றும் சிக்கனமான உற்பத்தி யுக்திகளை கையாண்டு நானோ காரினை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டது.

    குறைந்தளவு விற்பனை காரணமாக நானோ ஹேட்ச்பேக் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 275 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூனில் ஒரே ஒரு யூனிட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    டாடா குழுமம் நிறுவனத்துடன் நானோ காரின் உறவு நெருக்கமானது என்பதால் தொடர்ந்து நானோ கார் உற்பத்தி செய்யப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது. என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல்களில் நானோ கார் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. டாடா நானோ இந்தியா மட்டுமின்றி உலகின் விலை குறைந்த கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.



    "டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் அதன் தலைவர்களின் புதுவித மற்றும் வித்தியாச உணர்வின் வெளிப்பாட்டு சின்னமாக நானோ கார் இருக்கும். கார் மாடல்களின் கால அளவு சந்தையில் கிடைக்கும் வரவேற்பு, விதிமுறைகள் மற்றும் போட்டி உள்ளிட்டவற்றை பொருத்து மாறும். இதுபோன்ற அறிவிப்புகள் அதற்கான முடிவுகளை எடுக்கும் போதே அறிவிக்கப்படும்." என டாடா மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நானோ கார் மாடலை வைத்து வேறு திட்டங்கள், அதாவது எலெக்ட்ரிக் வெர்ஷன் உருவாக்குவது குறித்து திட்டமிடப்படுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருந்தது. எனினும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

    இதுவரை நானோ கார் முழுமையாக கைவிடப்படவில்லை என்றும் நானோ காரினை முன்பதிவு அடிப்படையில் குஜராத்தில் உள்ள சனந்த் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்வதாக டாடா மோட்டார்ஸ் அறவித்துள்ளது.
    ×