search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sperm"

    • உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம்.
    • உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம்.

    கற்றாழையில் சோற்றுக் கற்றாழைதான் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சாதாரணமாகக் கிடைப்பதும் சோற்றுக் கற்றாழைதான் என்பதால் அதைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். எல்லாக் கற்றாழைகளையும்விட செங்கற்றாழை அதிக மருத்துவக் குணம் வாய்ந்தது என்றாலும் அது இப்போது கிடைப்பதில்லை. மற்ற கற்றாழை வகைகளும் கிடைப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் வேறு சில கற்றாழைகள் வெளி உபயோக மருந்தாகப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

    கற்றாழையை முறைப்படி பொடியாக்கிச் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் இளமையாக வாழலாம் எனத் தேரன் வெண்பா கூறுகிறது. உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம். தவிர, ஈரல் மற்றும் குடல்களின் செயல்பாட்டைச் சரி செய்யக்கூடியது.

     சருமம் காக்கும் தோழன் இது. உடல் சூட்டைத் தணிப்பதில் கற்றாழைக்கு நிகர் கற்றாழையே. பெண்களின் கர்ப்பப்பை மற்றும் தொடை எலும்புகள் இடுப்பில் இணையும் பகுதியான கூபக உறுப்புகளில் வரும் நோய்களுக்கும், ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும் கைகண்ட மருந்து இது. உடல் பருமனைக் குறைக்கவும் பெரிதும் உதவும் மருந்து.

    இன்று உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம். அதனால்தான் நடைப்பயிற்சிக்காக மக்கள் குவியும் அத்தனை இடங்களிலும் கற்றாழை ஜூஸ் வியாபாரம் கன ஜோராக நடக்கிறது. நடைப்பயிற்சியுடன் கற்றாழை ஜூஸ் குடிக்கக் கிடைத்தால் இரட்டை நன்மைதானே! கலோரி மற்றும் கொழுப்பைக் கரைக்க கற்றாழை மிகவும் நல்லது.

    சரி, சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் விற்கப்படும் கற்றாழை ஜூஸ் உண்மையிலேயே ஆரோக்கியமானதா என்றால், இல்லை என்றே சொல்லலாம். காரணம், பெரும்பாலான ஜூஸ் கடைகளில் கற்றாழையின் தோலை மட்டும் அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கழுவாமல் அப்படியே போட்டு இடித்து நசுக்கி மோர், உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால், கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடக்கூடாது. கற்றாழை ஜூஸ் எப்படித் தயார் செய்ய வேண்டும், யாரெல்லாம் குடிக்கலாம் என்பது மிகவும் முக்கியம்.


    எப்படித் தயார் செய்வது?

    நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும். பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் செல்போனை அதிகமாக பயன்படுத்தினாலும் உடல் நலத்தை பாதிக்கிறது.
    • புகைப்பிடித்தல், மது அருந்துவது அதிகப்படியான செல்போன் பயன்பாடு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூலம் உடல் பருமன் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    புகை பிடிப்பதால் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் என எய்ம்ஸ் டாக்டர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரி உடற்கூறியல் துறையின் பேராசிரியர் டாக்டர் ரீமா தாதா கூறியதாவது:-

    புகை பிடிப்பது மது அருந்துதல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது போன்றவை இப்போது அதிகரித்து வருகிறது.

    ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் செல்போனை அதிகமாக பயன்படுத்தினாலும் உடல் நலத்தை பாதிக்கிறது.

    அதிகளவு புகைப்பிடித்தல் மற்றும் அதிகளவு செல்போன் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு விந்தணுவில் டி.என்.ஏ. பாதிக்கப்படும்.

    இதனால் இந்த பழக்கங்கள் கொண்ட ஆண்களுக்கு குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது.

    மேலும் மலட்டுத்தன்மை ஏற்படும் இந்த பழக்கங்கள் கொண்ட ஆண்களால் அவர்களுடைய மனைவிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு கருச்சிதைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    புகைப்பிடித்தல், மது அருந்துவது அதிகப்படியான செல்போன் பயன்பாடு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூலம் உடல் பருமன் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    மேலும் புற்றுநோய்கள் மன இறுக்கம் உள்ளிட்ட பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×