search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sowcarpet"

    சவுகார்பேட்டை அருகே கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    சென்னை சவுகார்பேட்டை நாராயண முதலி தெருவில் பேன்சி பொருட்கள் மொத்த விலைக் கடை வைத்திருப்பவர் விஜயன். இவரது கடையில் ராஜஸ்தானை சேர்ந்த பரத்குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த 1 வாரத்தில் கடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.5 லட்சத்தை திருடினார். கடந்த 3-ந்தேதி அவர் பணத்துடன் மாயமாகி விட்டார்.

    இது தொடர்பாக பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர், முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பரத்குமாரை தேடி வந்தனர். நேற்று ராஜஸ்தானுக்கு ரெயில் ஏற சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த பரத்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சவுகார்பேட்டை தங்க பட்டறை ஊழியரிடம் 52 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    சவுகார்பேட்டையில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்திருப்பவர் ‌ஷரிபுல் ஹக்.

    இங்கு நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்ப்பவர் ஷாகில் (18). இவர் இங்கு செய்த 52 பவுன் நகைகளை பாலீஸ் போடுவதற்காக வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள ஒரு பட்டறைக்கு கொண்டு சென்றார்.

    வழியில் 2 பேர் இவரை சந்தித்தனர். பட்டறை அதிபருக்கு நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டனர். வியாபாரம் சிறப்பாக நடக்க நகைகளுக்கு பூஜை நடத்துவதாக கூறினார்கள்.

    இதை உண்மை என்று நம்பிய ஷாகில் தான் கொண்டு சென்ற நகைகளுக்கு பூஜை நடத்த ஒப்புக்கொண்டார். அருகில் உள்ள ஒரு இடத்தில் நகைகளை வைத்து பூஜை செய்தனர். கண்களை மூடி தியானம் செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    ஒருவர் மந்திரம் சொன்னார். இந்த நிலையில் திடீரென்று அவர்கள் 52 பவுன் தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து யானை கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்களை பிடிக்க பூக்கடை போலீஸ் உதவி கமி‌ஷனர் லட்சுமணன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

    யானைக்கவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதன்மூலம் நகைகளை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    ×