search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seer varisai"

    • தீப அக்க்ஷயாவின் தாய்மாமன்கள் 3 பேர் சேர்ந்து மலை கிராம மக்களை வியக்க வைக்கும் வகையில் சீர்வரிசைகளை வழங்கினர்.
    • கேரள பாரம்பரிய நடனம் ஆடியபடி வந்த கலைஞர்கள் வெகுவாக கவர்ந்தனர்.

    பெரும்பாறை:

    தமிழகத்தில் திருமணம், காதணி, பூப்புனித நீராட்டு விழா, கிரஹபிரவேசம் உள்ளிட்ட எந்த விஷேசங்கள் நடந்தாலும் அதில் தாய்மாமன் பங்கு என்பது முக்கிய இடம் பெறும். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் தாய்மாமன் வழங்கும் சீர் என்பது மிகவும் பிரபலமாகும். அவரவர் வசதிக்கேற்ப சீர்வரிசை வழங்குவார்கள்.

    மொய் நோட்டில் முதலில் தாய்மாமன் மொய் எழுதிய பிறகுதான் மற்றவர்கள் மொய் எழுதும் பழக்கம் இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழாக்களில் தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவிற்கு தாய்மாமனுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

    குடும்பத்தில் எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் தனது சகோதரியின் மகள் அல்லது மகனுக்கு தாய்மாமன் அளிக்கும் சீர்வரிசைதான் சபையில் பேசப்படும். இந்த பழக்கம் இன்றுவரை தென்மாவட்டங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது உறவுகளை மேலும் வலுவாக்கும் நிகழ்வாக இருந்து வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை பகுதியான கே.சி.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் மாவட்ட மரம் வியாபார சங்க தலைவராக உள்ளார். இவரது மகள் தீப அக்க்ஷயாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்த முடிவு செய்தார். இதற்காக உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து தனது வீட்டின் அருகிலேயே மிக பிரமாண்டமான பந்தல் அமைத்திருந்தார்.

    தீப அக்க்ஷயாவின் தாய்மாமன்கள் 3 பேர் சேர்ந்து மலை கிராம மக்களை வியக்க வைக்கும் வகையில் சீர்வரிசைகளை வழங்கினர். உறவினர்கள் அனைவரும் வாழை, மாதுளை, திராட்சை, அரிசி, பருப்பு, சுவீட்ஸ், மிட்டாய் வகைகள், மலைத்தேன், மலைக்காய்கறிகள், பழங்கள், புத்தாடை, நகைகள் உள்ளிட்ட 300 வகை சீர்வரிசைகளை தலையில் சுமந்தபடியும், லாரியில் ஏற்றியும் செண்டைமேளம் மற்றும் அதிர் வேட்டுகள் முழங்க கொண்டு வந்தனர்.

    மேலும் கேரள பாரம்பரிய நடனம் ஆடியபடி வந்த கலைஞர்கள் வெகுவாக கவர்ந்தனர். இப்பகுதியில் பெரும்பாலும் மலை கிராம மக்கள், ஆதிவாசி மக்கள் அதிக அளவு வசித்து வரும் நிலையில் இதுபோன்ற தாய்மாமன் சீர்வரிசை வரவேற்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 3 கி.மீ. தூரம் சாரட் வண்டியில் தீப அக்க்ஷயாவை அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல அதன்பின்னர் சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.

    விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. 

    ஆடிப்பெருக்கு அன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறையை அடைவார்.
    சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலையில் திருமணம் நடந்து கொண்டிருந்த வேளை... அப்போது தென்திசைக்குச் செல்லுமாறு பணிக்கப்படுகிறார் அகத்திய பெருமான்.

    அகத்தியருக்கு ஆசி வழங்கி அவரைத் தென் திசைக்கு அனுப்பும்போது தன் கரங்களில் தவழ்ந்திருக்கும் மலர் மாலை ஒன்றை அவருக்கு வழங்குகிறாள் பார்வதிதேவி. அந்த மாலை ஒரு இளம்பெண் ணாக உருமாறுகிறது. தவசீலரான அகத்தியர் அவளைத் தன் கமண்டலத்துக்குள் அடக்கி விடுகிறார்.

    குடகில் தவம் இருந்தபோது கமண்டலம் சரிந்து, நீர் ஓடியதல்லவா? கமண்டலத்துக்குள் அடைக்கப்பட்டிருந்த பெண்ணே காவிரி என்னும் நதியாகிப் பெருகி ஓடினாளாம். எனவே, காவிரி என்பவளும் பார்வதிதேவியின் ஓர் அம்சமே. அதாவது, சிவபெருமானின் தேவி என்றும் சொல்வர்.

    இந்தக் கதைப்படி பார்த்தால், மகாவிஷ்ணுவுக்குத் தங்கை முறை காவிரி. பார்வதி தேவி தங்கை என்றால், அவள் வடிவான காவிரியும் தங்கைதானே!
    எனவேதான் தன் அண்ணனை வணங்கும் விதமாக மாலவன் ஸ்ரீரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தை ஒரு மலர் மாலை போல் அணிவித்து மகிழ்கிறாளாம் காவிரி. மலர் மாலையில் இருந்து பிறந்தவள்தானே காவிரி!

    ஸ்ரீரங்கம் என்பது ஒரு தீவு. காவிரியும் அதன் உப நதியான கொள்ளிடமும் ஸ்ரீரங்கத்தை மலர் மாலை போல் சூழ்ந்து வணங்குவதைப் பார்க்கிறோம். தங்கையான காவிரியே தன்னை மலர்மாலை போல் சூழ்ந்து வணங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால் அண்ணனான ரங்கநாதருக்கும் காவிரியின் மேல் அதீத பாசம்.

    வருடத்தின் சில விழாக்களில் இந்தப் பாசத்தை ஸ்ரீரங்கநாதரே வெளிப்படுத்துவார். அதில் ஒன்று - இந்த ஆடிப்பெருக்கு. ஆடிப்பெருக்கு அன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் பிரதான உத்ஸவரான நம்பெருமாள் சீர்வரிசைப் பொருட்களுடன் புறப்பட்டு அம்மா மண்டபப் படித்துறையை அடைவார். உறவினர்கள் வீடுகளுக்குப் போனால் அவர்களது முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருப்போம், அல்லவா? அதுபோல் பாச மிகுதியால் தன் தங்கையான காவிரியைப் பார்த்தபடி நம்பெருமாள் அமர்ந்திருப்பார். போன சூட்டோடு உடனே கிளம்பி விட மாட்டார். மாலை வரை அதே இடத்திலேயே நம்பெருமாள் காணப்படுவார்.

    காலையில் இவருக்கு காவிரிப் படித்துறையில் திருமஞ்சனம் நடைபெறும். வருகின்ற பக்தர்கள் அனைவரும் அண்ணனையும், தங்கையையும் வணங்குவார்கள். திருமஞ்சனம் முடிந்த பின்னர் யானை மேல் வைத்து எடுத்து வரப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை மாலை வேளையில் காவிரிக்கு அர்ப்பணம் செய்வார் ஸ்ரீரங்கநாதர்.
    ×