search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sajith Premadasa"

    • இலங்கை அதிபர் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கியது.
    • ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா ஆதரவு.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டைவிட்டுச் சென்ற கோத்தபய ராஜபக்சே முறைப்படி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    முன்னதாக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அவர் நியமித்தார். ரணில் இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற நிலையில், இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு பாராளுமன்றம் தொடங்கி உள்ளது. இதற்கான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த சிறப்பு அமர்வின் போது, அதிபர் தேர்தல் நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவித்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை வரும் 19 ஆம் தேதி தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தால், அதிபர் தேர்லுக்கு வரும் 20 ஆம் தேதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்க பாராளுமன்றத்தில் ராஜபக்சேவின் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர்.

    அந்த கட்சி ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தவிர மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த வேட்பாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

    இதனிடையே மாலத் தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்க எந்த புகலிடமும் வழங்கவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தனிப்பட்ட பயணமாகவே அவர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

    • இலங்கை பாராளுமன்றம் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.
    • ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு நடைபெறுகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகிய நிலையில், தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி விலகுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து புதிய அதிபர் தேர்வு தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் கூடுவதாகவும், புதிய அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூலை 19ஆம் தேதி பெறப்படும் என்றும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை முக்கிய எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயாவின் தலைவர் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தி உள்ளார். நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் சமகி ஜன பலவேகயா கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் தேர்வு தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற சஜித் பிரேமதாசவுக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    இதனிடையே, தாய்நாட்டை பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது, வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றை தவிர மாற்றுத் தீர்வு எதுவும் இல்லை என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அதிபரின் கீழ் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கவும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×