search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removals"

    • குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை சாலையின் இருபுறமும் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.
    • ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோர துணிக்கடைகள் இருப்ப தால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை சாலையின் இருபுறமும் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

    இது குறித்து பல தரப்பி னர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெடுச்சா லைத்துறையினர் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சரவணா தியேட்டர் எதிரில் பழைய இருசக்கர வாக னங்கள் விற்பனை செய்யும் நபர்கள், நடைமேடை முழுதும் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். அவைகளை எடுக்க சொல்லி அறிவுறித்தினர்.

    மேலும் ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோர துணிக்கடைகள் இருப்ப தால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இத னால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், பலர் சாலை யினை ஆக்கிரமிப்பு செய்து துணிக்கடைகளை வைத்துள்ளனர். இது தவறு என சுட்டிக்காட்டி அகற்ற வேண்டிய நகராட்சி நிர்வா கத்தினர் வரி வசூல் செய்வதை காரணமாக காட்டி, கடை உரிமையா ளர்கள் கடைகளை அகற்ற மறுக்கின்றனர். மிக குறுகலான சாலையில் இந்த கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது என்றனர். அந்த துணி கடைகளின் ஆக்கிர மிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

    மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட ஸ்டாண்டிங் விளம்பர போர்டுகள், பிளெக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இந்த பணி யில் நெடுஞ்சாலைத்துறை யினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.
    • .இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார். மனுவில் சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தார்.இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் பாலாஜி, நிலஅளவையர் சாந்தினி ஆகியோர் சுடுகாடு பகுதி முழுவதும் அளவீடு செய்தனர். அப்போது சுடுகாடு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், லட்சுமி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.
    • சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது.

     அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையம் அருகே , காந்தியின் "சத்திய சோதனை " நினைவுச் சின்னம் உள்ளது. மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.

    அவ்வாறு அவர் சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. இது குறித்து மாலைமலர் நாளிதழில் கடந்த மாதம் 26- ந் தேதி செய்தி வெளி யானது. இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று அங்கு பார்வையிட்டு ஆய்வு நடத்தி னர். தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    மேலும் நடவடிக்கைகள் எடுத்து, காந்தியின் வரலாற்று நினைவுச் சின்னம் பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

    • குமாரபாளையத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர்.
    • இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் பொதுப்பணித்துறை இடத்தை ஆக்கிரமித்து பலர் வீடுகள், கடைகள் கட்டியிருந்தனர். சுமார் 30 ஆண்டு காலமாக இந்த ரோடு ஆக்கிரமிப்பு தீராத பிரச்சனையாக இருந்து வந்தது. பலமுறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது, அரசியல்வாதிகள் சிலரின் தலையீட்டால் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர். இதனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    வருடங்கள் செல்ல, செல்ல இந்த ரோடு மிகவும் பழுதாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் மீண்டும் முனைப்புடன் செயல்பட்டு வழக்கு தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு பெற்றனர். இதன்படி நேற்று போலீசார் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர். பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது. இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • ராஜபாளையம் அருகே சேத்தூர் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பஸ் நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றி னார்கள்.

    மேலும் 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    சேத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி, நில அளவை யர் காளிமுத்து, போலீஸ் இன்ஸ்ெபக்டர் ஆனந்த குமார், சப்-இன்ஸ்ெபக்டர் பெருமாள்சாமி, சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் நேரடி கண்காணிப்பில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அசோக்குமார், வரிவசூலர் பலராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆக்ரமிப்புகளை அகறற்றும் பணியில் ஈடுபட்டனர்.சேத்தூரில் நீண்ட இடை வெளிக்கு பிறகு கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மெயின் ேராட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • வேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் போத்தனூர் பகுதியில் உள்ள தார் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமங்களை அதிகாரிகள் அகற்றினார்கள்.
    • அதே போல் பல்வேறு வகையான சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் சிமெண்ட் பைப் கம்பெனியும் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் -ஜேடர்பா ளையம் செல்லும் சாலையில் உள்ள பொத்தனூரில் தார் சாலையின் இருபுறமும் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்கள், பழக்கடைகள், காய்கறி கடைகள், பிளாஸ்டிக் கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. அதே போல் பல்வேறு வகையான சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் சிமெண்ட் பைப் கம்பெனியும் உள்ளது.

    இந்த சிமெண்ட் பைப் கம்பெனி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், பல்வேறு கடைக்காரர்களும் தார் சாலையின் இருபுறமும் ஓரத்தில் தங்களது விளம்பர போர்டுகளை வைத்துள்ளனர். அதேபோல் கடைக்காரர்கள் பலர் தார் சாலை வரை ஆக்கிரமித்து இருந்தனர். இது குறித்து அப்பகுதி சேர்ந்தவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்திருந்தனர்.

    அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பால கிருஷ்ணன் தலைமையில் சாலை ஆய்வாளர்கள் சங்கர், சிவகாமி மற்றும் சாலை பணியாளர்கள் கொண்ட குழுவினர் வேலூர் - ஜேடர்பாளையம் செல்லும் போத்தனூர் பகுதியில் உள்ள தார் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமங்களை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×