search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pulianthoppu"

    புளியந்தோப்பில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு மசூதி தெருவை சேர்ந்தவர் துக்காராம் (வயது 42). செருப்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தாராபாய் (32). இவர் வில்லிவாக்கம் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.

    மனைவி தாராபாய் நடத்தையில் துக்காராம் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

    நேற்று இரவு மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர். நள்ளிரவில் துக்காராம் தூக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போதும் மனைவியின் மீது அவருக்கு ஆத்திரம் தீர வில்லை. இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    திடீரென்று அம்மிக்கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பின்னர் துக்காராம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

    சென்னை புளியந்தோப்பு அருகே சிறுவனை கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு போகிப் பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்-துர்கா தேவி தம்பதியின் மகன் அஜய் (3).அதேபகுதியில் உள்ள மாநகராட்சி உருது படித்து வந்தான். நேற்று காலை பள்ளிக்கு சென்றான்.

    அப்போது பள்ளிக்கு வந்த ஒரு பெண் தான் சிறுவனின் அத்தை தேவி என்று கூறி மாணவனை அழைத்தார். இதை உறுதி செய்வதற்காக தன்னிடம் இருந்த போனில் சிறுவனின் தாய் பேசுவதாக ஆசிரியையிடம் தெரிவித்தார்.

    அதில் பேசிய பெண், தன் மகன் அஜய்யை அத்தையுடன் அனுப்பி வைக்கும்படி கூறினார். இதை நம்பிய ஆசிரியை மாணவன் அஜய்யை அந்த பெண்ணுடன் அனுப்பி வைத்தார்.

    மாலையில் மகன் அஜய் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளில் தாயும், தந்தையும் தேடினார்கள். பள்ளிக்கு சென்று கேட்ட போது பையனின் அத்தை தேவி என்று கூறி அழைத்து சென்றதை தெரிவித்தனர். 2 பெண்கள் சேர்ந்து மாணவனை கடத்தியது தெரியவந்தது.

    இதுகுறித்து புளியந்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். பள்ளியின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

    அப்போது பள்ளிக்கு வந்த பெண் ஏற்கனவே பிரகாஷ் வீட்டில் கூலிவேலை செய்த குட்டியம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு 1 மணி அளவில் அந்த பெண் வசிக்கும் வியாசர்பாடி கணேசபுரத்துக்கு போலீசார் சென்றனர்.

    அங்கு குட்டியம்மாள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் சிறுவன் அஜய் தூங்கிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே சிறுவனை மீட்டனர்.

    அவனை கடத்தி வந்த குட்டியம்மாள் (38), அவருடைய மகள் ஐஸ்வர்யா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணிடம் விற்பதற்காக சிறுவன் அஜய்யை குட்டியம்மாளும் அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் கடத்தியது தெரிய வந்தது.மீட்கப்பட்ட சிறுவன் அஜய்யை பெற்றோரிடம் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி ஒப்படைத்தார்.

    புளியந்தோப்பு அருகே 8 மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், டிக்காஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை தள்ளிச் சென்ற ஒருவரை நிற்க சொன்னார். உடனே அவர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினார்.

    அவரை பிடித்து விசாரித்த போது புளியந்தோப்பு அம்பேத்கார் நகரை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பதும் மோட்டார் சைக்கிள் திருடி சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து 8 மோட்டர் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    ×