search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "professor arrest"

    கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    நான் கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவரை 6 மாதத்தில் பிரிந்து எனது பெற்றோர் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்தேன். கருத்துவேறுபாடு காரணமாக எனது கணவரை பிரிந்ததால் என்னால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக 2-ம் ஆண்டுக்கான திறன் மதிப்பீட்டு அறிக்கையை என்னால் சமர்ப்பிக்க முடியவில்லை.

    இதனையடுத்து எங்களது துறை தலைவர் பேராசிரியர் விளாங்குறிச்சி மதி நகரை சேர்ந்த ரகுநாதன் (வயது 42) என்பவர் அவரது அறைக்கு வருமாறு அழைத்தார். நான் அறைக்கு சென்ற போது எதற்காக அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என கேட்டார். அதற்கு நான் என்னுடைய குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறினேன். அதற்கு ஆறுதலாக பேசிய அவர் திடீரென என்மேல் கையை வைத்து தகாத முறையில் நடந்து கொண்டார். அதிர்ச்சியடைந்த நான் கையை தட்டி விட்டு வெளியே வந்து விட்டேன்.

    பின்னர் அவர் எனக்கு உதவி செய்வது போல அறிக்கையை நான் சமர்ப்பிப்பதற்காக நோட்ஸ் கொடுப்பது போல காரில் எனது ஊருக்கு வந்தார். அங்குள்ள சந்தை அருகே நான் நின்று கொண்டு இருந்தேன்.

    அப்போது அவர் இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது காரை நிறுத்த முடியாது எனவே காருக்குள் ஏறு என கூறினார். நான் ஏற மறுத்ததால் கையை பிடித்து இழுந்து காருக்குள் ஏற்றினார். பின்னர் காரில் வைத்து ஆறுதலாக வார்த்தைகள் பேசி என்னிடம் தவறாக நடக்க முயன்றார். மேலும் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், அவரது மனைவியை விவாகரத்து செய்து விடுவதாகவும் கூறினார். நான் மறுத்து சத்தம் போட்டு விடுவதாக கூறினேன்.

    இதனையடுத்து அவர் நடந்த சம்பவங்களை வெளியே சென்னால் கொலை செய்வதாக மிரட்டி விட்டு சூலூரில் என்னை இறக்கி விட்டு சென்றார்.அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் நான் நடந்த சம்பவங்களை வெளியே செல்ல முடியாமல் இருந்தேன். மீண்டும் நான் கல்லூரி சென்றதும் இது குறித்து எனது தோழிகளிடம் கூறினேன். அவர்களுக்கும் துறை பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    மாணவி அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை கல்லூரியில் வேலை தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார். #arrest

    கோவை:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 32). கல்லூரி பேராசிரியர்.

    இவர் சமீப காலமாக கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரியில் வேலை பார்த்து வருவதாக நண்பர்களிடம் கூறி உள்ளார்.

    மேலும் கல்லூரியில் லேப் டெக்னீசியன், அலுவலக ஊழியர் பணியிடங்களில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி தன்னிடம் படித்த மதுரை, தேனி, கம்பம், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சிலரிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார்.

    இதற்காக கல்லூரி லோகோவை பயன்படுத்தி மாணவர்களுக்கு வேலை நியமன ஆணையை வழங்கி உள்ளார். கல்லூரி தாளாளர் அனுமதியுடன் இந்த உத்தரவு வழங்கப்படுவதாகவும், கடந்த 11-ந்தேதி முதல் பணியில் சேர வேண்டும் எனவும் மாணவர்களுக்கு இ-மெயில் அனுப்பினார். இதில் ஒரு மாணவர் தனது நியமன உத்தரவு குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரித்தார்.

    அப்போது கல்லூரியில் வேலைக்கு யாரையும் தேர்வு செய்ய வில்லை என கூறினர். அதிர்ச்சியடைந்த அவர் கல்லூரி நிர்வாகத்தில் இருந்து தனக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நியமன ஆணையை அனுப்பினார். அவை போலியானவை என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில் சரவண குமார் இதேபோல மேலும் சிலரிடம், கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாக அலுவலர்கிருஷ்ண மூர்த்தி என்பவர் குனியமுத்தூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சரவணகுமார் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் முதுகலையில் பல்வேறு பட்டப் படிப்புகள் படித்துள்ள இவர் மதுரை, கொடைக்கானலில் உள்ள கல்லூரிகளில் பேராசிரியராக வேலை பார்த்ததும், பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதும் தெரிய வந்தது.

    இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு இடையே விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

    இந்நிலையில் சரவணகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் பேராசிரியர் நேர்காணலுக்கு வந்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த சரவணகுமார் வழக்கு கல்லூரியின் லோகோவை பயன்படுத்தி பணம் பறிக்க திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.

    மோசடியின் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    ×