search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private company employee murder"

    காரைக்கால் அருகே தனியார் கம்பெனி ஊழியரை அடித்து கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரி பாரதியார் வீதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தவர் இமானுவேல்ராஜா (வயது 26). இவரது பெற்றோர் இறந்து விட்டனர். அதனால் அவர் தனியாக வசித்து வந்தார்.

    எம்.ஏ. படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்தார்.

    பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இமானுவேல்ராஜா கோட்டுச்சேரிக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோட்டுச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு இமானுவேல்ராஜாவின் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் அவரது 2 கைகளும் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.

    யாரோ மர்ம மனிதர்கள் வீடு புகுந்து இமானுவேல்ராஜாவை அடித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் அவரது கைகளை கட்டி தூக்கில் உடலை தொங்க விட்டு சென்றுள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து கொண்டு சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    பின்னர் இமானுவேல் ராஜாவின் உடலை போலீசார் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் கூறும்போது, யாரோ மர்ம மனிதர்கள் இமானுவேல்ராஜாவை கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்க விட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன்தான் முழுவிவரம் தெரிய வரும். இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
    மணலியில் இன்றுகாலை வீட்டின் முன்பு தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவொற்றியூர்:

    மணலி அடுத்த சின்ன சேக்காடு, பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 55). எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 6 மணி அளவில் கோபால் அருகில் உள்ள கடையில் செய்தித்தாள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். வீட்டு முன்பு வந்தபோது மர்ம வாலிபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்தார்.

    திடீரென அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோபாலை சரமாரியாக வெட்டினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

    உடனே மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோபாலை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் போகும் வழியிலேயே கோபால் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    கொலையுண்ட கோபாலுக்கு மீனாட்சி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். பிரசவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகிலா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    இன்று காலை கொலை நடந்த போது வீட்டின் உள்ளே கோபாலின் மனைவி மற்றும் மகன், மகள் இருந்தனர். கொலையுண்ட கோபாலின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கோபால் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார் என்று தெரியவில்லை. வேலை பார்த்த இடத்தில் அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டின் முன்பு தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மணலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கருதி தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் சாலை ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பிராங்கிளின் அருள்தாஸ் (வயது 46). இவர் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் பேட்டரி கம்பெனியில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹெலன் ஜாஸ்மின் (43). இவர் உனிசெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    ஹெலன் ஜாஸ்மினின் சகோதரி பேபி கிறிஸ்டியா (46). இவரது கணவர் ரவிக்குமார் (50). டைலர். இவர்கள் தளி கும்பார தெருவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேபி கிறிஸ்டியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை தளி கும்பார தெருவில் உள்ள ரவிக்குமாரின் வீட்டிற்கு பிராங்கிளின் அருள்தாஸ் சென்றார். அந்த நேரம் ரவிக்குமார்-பிராங்கிளின் அருள்தாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் வீட்டின் முன்பு இருந்த பெரிய கல்லை தூக்கி பிராங்கிளின் அருள்தாஸ் தலை மீது போட்டார். இதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த கொலை குறித்து தகவலறிந்த தளி போலீசார் அங்கு சென்று ரவிக்குமாரை கைது செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம் ரவிக்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    தளி பி.டி.ஓ. அலுவலகத்தில் வேலை பார்த்த தேவநேசனின் மகள் பேபி கிறிஸ்டியா என்பவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்த நிலையில் அவரது சகோதரி ஜாஸ்மினின் கணவர் பிராங்களின் அருள்தாசும், எனது மனைவி பேபி கிறிஸ்டியாவும் அடிக்கடி பேசி பழகி வந்ததாக தெரியவந்தது. இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து கேள்விப்பட்ட பிராங்களின் அருள்தாஸ் நேற்று எனது வீட்டிற்கு வந்தார். அவர் எனது மனைவியுடன் திரும்ப சேர்ந்து வாழுமாறு என்னிடம் கூறினார்.

    அப்போது நான், உன்னால் தான் எனது மனைவி என்னிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார் என்று கூறி தகராறில் ஈடுபட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை கீழே தள்ளிவிட்டேன். உடனே அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×