search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Change"

    • சமூக வலைதளங்களில் வைரலானது
    • போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராய வியாபாரி ஒருவரிடம் உளவுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், 'தனக்கு தினமும் ஆயிரம் ரூபாய் தர வேண்டும். 4 அல்லது 5 நாளைக்கு ஒருமுறை மொத்தமாக கொடுத்திடு.

    யார் பிடிச்சாலும் என் பெயரை சொல்லக்கூடாது' என்று பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த ஆடியோ விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாராய வியாபாரியிடம் பேசியது திருப்பத்தூர் உளவுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து ரங்கநாதனிடம், வேலூர் உளவுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ரங்கநாதனை, வேலூர் உளவுதுறை அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாராய விற்பனையால் மது பிரியர்கள் காலையிலேயே சாராயம் அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் நிலவியது.
    • சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசாரை கூண்டோடு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாற்றம் செய்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளநத்தம் ,பாண்டியன் குப்பம், சமத்துவபுரம், அம்மையகரம் ,சின்னசேலம், தாகம் தீர்த்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வந்தது. சாராய விற்பனையால் மது பிரியர்கள் காலையிலேயே சாராயம் அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் நிலவியது. இதன்காரணமாக பல்வேறு குடும்பத்தினர் மன உளைச்சலால் நிம்மதி இன்றி இருந்து வந்தனர். எனவே கள்ளச்சாரயத்தை தடுக்க சமூக ஆர்வலர்கள் பலமுறை போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.கள்ள சாராயம் விற்பனை குறித்து செய்திகள் வெளியானது.

    எனவே சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசாரை கூண்டோடு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாற்றம் செய்தார்.  அதன்படி சின்னசேலத்தில் பணிபுரிந்த நாராயணசாமி, தேவமூர்த்தி, தேவேந்திரன், ராபர்ட் ஜான், ஆகியோர்களை கள்ள க்குறிச்சி, கச்சிரா யபளையம், பகண்டை எக்ஸ் கூட்ரோடு ஆகிய போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கீழ் குப்பம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த ராஜேந்திரன், கோவிந்தராஜ், சேட்டு, நந்தகோபால், ஆறுமுகம் உள்ளிட்டோர் கச்சிராய பாளையம், திருநாவலூர், உளுந்தூ ர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

    ×