search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் மாற்றம்"

    • வேலூர் டி.எஸ்.பி. சுவாதி மதுரை மாநகர் தில்லை நகர் திடல் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
    • மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றியவர்களும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பி.க்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மண்டல வாரியாக இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் தெற்கு மண்டலத்தில் 25 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வடக்கு மண்டலத்தில் 23 அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். மத்திய மண்டலத்தில் 15 பேரும், மேற்கு மண்டலத்தில் 18 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் டி.எஸ்.பி. சுவாதி மதுரை மாநகர் தில்லை நகர் திடல் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவள்ளூர் டி.எஸ்.பி. மிதரன், விழுப்புரம் கோட்ட குப்பத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் டி.எஸ்.பி. மனிஷா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாறுதலாகி உள்ளார். செங்கல்பட்டு டி.எஸ்.பி. ஸ்வேதா, சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கும், காஞ்சிபுரம் மனோஜ்குமார் ஊட்டிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு வசந்தகுமார் மதுரை திருமங்கலத்துக்கும், செங்கல்பட்டிலேயே பணியாற்றிய பாலகிருஷ்ணன், நாகப்பட்டினத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போன்று தெற்கு மண்டலத்துக்குட்பட்ட மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றியவர்களும், மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றியவர்களும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    இடமாற்றம் செய்யப்பட்ட 81 டி.எஸ்.பி.க்களும் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ×