search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Planting palm seeds"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி தாலுகா, ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பனந்தோப்பு பகுதியில் உள்ள ஆற்றின் இரு பக்கமும், ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    ஆறுகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் நோக்கத்தில் முதல் கட்டமாக, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையம் தென்பத்து குளம் மற்றும் குட்டி குளக்கரைகளில் கடந்த ஆண்டுகளில் பனை விதைகள் நடுவு செய்யப்பட்டதில் பல விதைகள் முளைத்தது.
    • விதைகள் முளைக்காமல் இருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் மீள் நடுகை செய்யப்பட்டது.

    கடையம்:

    கடையம் தென்பத்து குளம் மற்றும் குட்டி குளக்கரைகளில் கடந்த ஆண்டுகளில் பனை விதைகள் நடுவு செய்யப்பட்டதில் பல விதைகள் முளைத்தது. விதைகள் முளைக்காமல் இருந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் மீள் நடுகை செய்யப்பட்டது. இதில் தன்னார்வலர்கள் கிங்ஸ்லி, நாவினி, ஜெப்வின், விஷ்ணு, கவின் மற்றும் பல வேளாண் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பனையாண்மை மற்றும் சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் பாமோ ஒருங்கிணைத்திருந்தார்.

    • பனை விதைகள் நடுவதால் ஏரியில் நீர் வளம் பெருகும்
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    கலவை:

    பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திமிரி ஒன்றியம் கலவையை அடுத்த ஆரூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறுகையில் "பசுமை தமிழக இயக்கத்தின் நோக்கம் அதிக அளவில் நாட்டு ரக மரக்கன்றுகளை நடுவதாகும். எனவே ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நட வேண்டும்.

    மேலும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்ய வேண்டும். இதனால் ஏரியில் நீர் வளம் பெருகும். பனை விதை நடவு செய்பவர்களுக்கு அரசு உதவி புரிகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், தாசில்தார் சமீம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷாநவாஸ், ஜெயஸ்ரீ, வனக் காவலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.

    ×