search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி
    X

    ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி தாலுகா, ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பனந்தோப்பு பகுதியில் உள்ள ஆற்றின் இரு பக்கமும், ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    ஆறுகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் நோக்கத்தில் முதல் கட்டமாக, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×