search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pharmacist"

    • மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    காளையார்கோவில்

    மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், கொள்கை பரப்பு செய லாளர் மருது அழகுராஜ், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன், கே வி. சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ண குமார் வே.ஆரோக்கியசாமி, சிவகங்கை நகர்கழக செயலாளர் துரைஆனந்த் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ். மாங்குடி எம்.எல்.ஏ. மாவட்ட காங்கிரஸ் தலை வர் சஞ்சய் காந்தி, பொதுக் குழு உறுப்பினர் ஜெய சிம்மன், கணேசன், சன்னாசி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல். ஏ. ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சார்லஸ் , பா.ஜ.க. மேப்பல் சக்தி, மாவட்டத்தலைவர் பில்லப்பன், வழக்கறிஞர் சொக்கலிங்கம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    • மதுரையில் மருது பாண்டியர்கள் சிலைக்கு இந்திய ஜனநாயக கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மருதுபாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள அவர்களது சிலைகளுக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

    மாநில அமைப்பு செயலாளரும், மதுரை மாவட்ட செயலாளருமான அன்னை இருதயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஞானசேகரன் (வடக்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் நெல்லை ஜீவா மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் இந்திய ஜனநாயக கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம்,வடக்கு மாவட்ட செயலாளர் ராபின்சன்,

    மாநில மகளிரணி அணி துணை செயலாளர் சகிலாபோஸ்,

    மாவட்ட பொருளாளர் முத்துராஜா,அமைப்பு செயலாளர் அமிர்த கிருஷ்ணன்,வேந்தர் பேரவை செயலாளர் கதிரவன், மாநகர் மாவட்ட மகளிரணி இணை செயலாளர் அன்னபூரணி, மாவட்ட துணை செயலாளர் ஞானசுந்தர், இளைஞரணி செயலாளர் ராஜேஷ், பொருளாளர் ரஞ்சித், வர்த்தக அணி செயலாளர் செந்தில்குமார், உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சியினர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு காளையார் கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் கட்சியினர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் சிவகங்கை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், பழனிச்சாமி, சிவாஜி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வமணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், காளையார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன்.

    தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர்ராமநாதன், மற்றும் மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் நவநீதன்.

    மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கண்ணப்பன் மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை உள்ளிட்ட ஏராள மான அ.தி.முக. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு ஆஸ்பத்திரி மருத்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர் .
    • இந்த போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மருந்தாளு நர்கள் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட

    மருந்தாளுநர் பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு ஆஸ்பத்திரி மருத்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர் .

    அப்போது அவர்கள் கூறுகையில், கொரோனா ஊக்கத்தொகை, எம். எஸ். ஓ. சி. பி. மருந்தாளுனர்கள் அனைவருக்கும் உடனடி யாக வழங்கிட வேண்டும். காலியாக உள்ள எம்.எஸ்.ஓ.சி.பி பதிவு எண் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் மற்றும் மருந்தாளுனருக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அரசு நடத்திட வேண்டும் . இது தொடர்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை அட்டையை அணிந்து சேலம் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    இந்த போராட்டத்தில் இணை செயலாளர் மணி கண்டன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட மருந்தாளு நர்கள் கலந்து கொண்டு

    பணியில் ஈடுபட்டனர். சேலம் சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மனை 8 மாவட்டங்களுக்கு உள்ள டக்கியது தற்போது நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மருந்து வழங்குவதற்கு மருந்தாளுனர்கள் இல்லாமல் சரிவர மருந்து நோயாளி களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . எனவே தமிழக அரசு உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    ×