search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol tank"

    • 8 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐதராபாத்:

    ஐதராபாத் மாநிலத்தில் சாலையோரத்தில் பைக் ஒன்று தீபற்றி எரிந்தது. தீப்பற்றி எரிந்த பைக்கை தண்ணீர் ஊற்றி அணைக்க அருகில் இருந்தவர்கள் போராடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பெட்ரோல் டேங்க் வெடித்ததால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த 8 பேரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல் டேங்க் வெடித்து 8 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    ×