search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old man commits suicide by"

    • மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார்.
    • மன உளைச்சலுக்கு ஆளானவர் விஷம் குடித்து மயங்கினார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே அன்னை இந்திராநகரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (வயது 61). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டார். இவருக்கு மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார். இதனால் மது போதைக்கு அடிமையானார்.

    இதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டது. மன உளைச்சலுக்கு ஆளான முத்துக்காளை விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்காளை உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதுகெலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
    • நோய் குணமாகாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

    தேனி:

    தேனி மாவட்டம் ஊத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 70). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    கடந்த 2 வருடங்களாக முதுகெலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்தபோதும் நோய் குணமாகாததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நஷ்டம் காரணமாக மன வேதனையில் இருந்த ஆறுமுகம் காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, அகத்தியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (62). இவர் வீட்டு உபயோக பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்தார். கடந்த 2 வருடமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஆறுமுகம் சரிவர வியாபாரம் செய்யாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆறுமுகம் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. ஆறுமுகம் மகன் கார்த்திகேயன் தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.

    இந்நிலையில் கணபதிபாளையம்-மன்னதம்பாளையம் இடைப்பட்ட பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் சம்பவத்தன்று முதியவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தவர் தனது தந்தை என உறுதி செய்தார்.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமு கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மன வேதனையில் இருந்த ஆறுமுகம் காலிங்கராயன் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×