என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NorthEast"
- தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
- இயல்பை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகம்.
சென்னை:
தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எல்-நினோ கால கட்டத்தில் மத்தியப் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு, மண்ணின் ஈரப்பதம் குறைவு போன்ற காரணங்களால் நிகழாண்டில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈரோட்டில் 27 நாள்களும் பரமத்தி வேலூரில் 22 நாள்களும் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 7 டிகிரி செல்சியஸ் அதிகம்.
இந்தநிலையில், மே 7-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரையும், வட தமிழகத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரிக்கும், மேலும், மே வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலைவீசும்.
பருவ காலம் போல் கோடை காலங்களில் மழை பெய்யாது. இதில் மார்ச் 1 முதல் மே 2 வரையிலான கால கட்டத்தில் இயல்பான மழை அளவு 50 மி.மீ. ஆகும். ஆனால், நிகழாண்டில் வெறும் 10 மி.மீ அளவுதான் மழைப்பொழிவு பதிவாகி யுள்ளது. இது இயல்பை விட 74 சதவீதம் குறைவு. பொதுவாக மே மாதம் என்பது வெயில் காலம் என்பதால் கோடை மழை வரும்போது வெயிலின் தாக்கம் சற்று குறையும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 9-ந்தேதி வரை காற்றுக் குவிதல் காரணமாக இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 7-ந் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை அடுத்த 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும். சென்னையில் தற்போதைக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி (கவுகாத்தி) 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. கவுகாத்தி அணியில் வெற்றிக்குரிய கோலை 87-வது நிமிடத்தில் பார்த்தோலோம் ஒக்பேச் அடித்தார். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட சென்னை அணி 13-வது லீக்கில் ஆடி சந்தித்த 10-வது தோல்வி இதுவாகும். இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- பெங்களூரு எப்.சி. அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்