search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nithya"

    • கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
    • ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது.

    கோவை:

    ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள வீரர்-வீராங்கனைகள் பட்டியலை தேசிய விளையாட்டு ஆணையம் வெளியிட்டு உள்ளது.

    இதில் கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களில் வித்யா 400 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். 100 மீட்டர் தடை தாண்டும் போட்டிக்கு நித்யா தேர்வாகி இருக்கிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ள நித்யா, வித்யா ஆகிய 2 பேரும் சிறு வயது முதலே தடகள விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவர்கள் பள்ளிப்படிப்பு மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் தீவிர ஆர்வம் காட்டினார்கள். இது அவர்களின் தந்தை ராமராஜூக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் மகள்களின் எதிர்கால கனவுக்கு உறுதுணையாக இருந்தார்.

    ராமராஜ், கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.10 ஆயிரம் மாத சம்பளத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வாடகை வீட்டில் வசித்த போதிலும் ராமராஜ் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் குழந்தைகளை ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். அங்கு வித்யாவும், நித்யாவும் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து கடினமாக படித்தனர். தடகள விளையாட்டு போட்டிகளிலும் ஜொலித்தனர்.

    இது அவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளது. வித்யா தற்போது கேரள மாநில ரெயில்வே துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நித்யா சென்னை வருமான வரித்துறையில் அதிகாரியாக உள்ளார்.

    சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது சகோதரிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வித்யா கூறுகையில், நாங்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக பங்கேற்பது பெருமையாக உள்ளது. இதற்காக நாங்கள் விளையாட்டு மட்டுமின்றி பொருளாதார நிலையிலும் பல்வேறு தடைகளை தாண்டி இந்த நிலைக்கு வந்து உள்ளோம். இது எங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். அரியானா மாநிலம் சண்டிகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வித்யா பதக்கம் வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.

    நித்யா கூறுகையில், நாங்கள் 8-ம் வகுப்பு படிக்கும்போதே தடகள போட்டிகளில் சாதிக்க தொடங்கி விட்டோம். 10-ம் வகுப்பு படித்தபோது தேசியஅளவில் முதலாவதாக பதக்கத்தை தட்டிப்பறித்தேன். நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் நாங்கள் இருவரும் பங்கேற்பது மனதளவில் சற்று நெருக்கடியாக உள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அடுத்தாண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும்.

    நாங்கள் இதுவரை தடகள போட்டிகளுக்காக சொந்த காசை செலவழித்து வருகிறோம். ஆசிய விளையாட்டு போட்டியில் பெரியளவில் சாதித்தால் எங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடை க்க வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் சகோதரிகள் பங்கேற்பது மிகவும் அரிதான நிகழ்வு தான். அப்படியான நிலையில் நாங்கள் 2 பேரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றால் இந்தியா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை கிடைக்கும்.

    எங்களின் தந்தை ராமராஜ் கோவையில் தற்போதும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தாயும், தந்தையும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தர வேண்டும். வசதியாக வாழவைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நாஙகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று அடுத்தாண்டு நடக்க உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவோம், நிச்சயமாக சாதனை படைப்போம் என்று தெரிவித்து உள்ளார்.

    • பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கம் பெற்றார்.
    • 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றார்.

    ராஞ்சி:

    26-வது தேசிய பெடரேசன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திர வீராங்கனை ஜோதி புதிய சாதனை படைத்ததோடு தங்கப்பதக்கம் பெற்றார்.

    அவர் பந்தய தூரத்தை 12.89 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு அவர் 13.43 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து ஜோதி புதிய சாதனை நிகழ்த்தினார்.

    தமிழக வீராங்கனை நித்யா 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் பந்தய தூரத்தை 13.44 வினாடியில் கடந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சப்னாகுமாரி 13.58 வினாடி யில் கடந்த வெண்கல பதக்கம் வென்றார்.

    வட்டு எறியும் போட்டியில் மத்திய பிரதேச வீராங்கனை ஷாலினி சவுத்ரி தங்கம் வென்றார்.

    ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் மராட்டியத்தை சேர்ந்த தேஜஸ் அசோக்கும், சங்கிலி குண்டு எறிதல் பஞ்சாப்பை சேர்ந்த தம்ஜீத் சிங்கும் தங்கம் வென்றனர்.

    • மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்.
    • இவர் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

    மாதவரம் பொன்னியம்மன்மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் அதே பகுதியில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் ரூ.94 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதில் ரூ.52 ஆயிரத்தை திருப்பி கொடுத்த கலைச்செல்வன் மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் பணம் தொடர்பாக நேற்று இரவு கலைச்செல்வனின் வீட்டிற்கு சென்று நித்யா கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் மாதவரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவகுமார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • இவர்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

    திரைப்பட நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவருமான தாடி பாலாஜியின் மனைவி நித்யா (35). இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

    நித்யா தற்போது மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி (வயது 62). இருவருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

    மணியின் காரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யா சேதப்படுத்திள்ளார். இதனை மணி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் நித்யா சேதப்படுத்தியது உறுதியானது. இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் நேற்று நித்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தாடி பாலாஜி மனைவி நித்யா, தேசிய பெண்கள் கட்சி சார்பாக டெல்லியில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். #ThadiBalaji #Nithya
    பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியும், மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்கள்.

    நித்யா சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ‘தேசிய பெண்கள் கட்சி’ யில் இணைந்தார். அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார். இது குறித்து நித்யா கூறியதாவது:-

    ‘காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருந்தேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்க போய் என்னை பற்றி அவதூறு பரப்ப பாலாஜி திட்டமிட்டு இருந்தார்.



    டெல்லியில் எங்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளுக்கே போன் செய்து ‘அவள் எல்லாம் கட்சித் தலைவியா’ என்று கேட்டு பிரச்சினை செய்து இருக்கிறார். இவர் சொன்ன எதையும் கவனத்தில் கொள்ளாத எங்கள் கட்சியின் தலைநகர் நிர்வாகிகள்தான் என்னை டெல்லியில் போட்டியிட அறிவுறுத்தினார்கள்.

    வடக்கு டெல்லியில் தமிழர்கள் பரவலாக வசிப்பது எனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. அதனால் சரி என்று சொல்லி விட்டேன். அடுத்த சில நாள்களில் டெல்லி போய் தேர்தல் வேலைகளை தொடங்கவேண்டும்.’’

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் இணைந்த தாடி பாலாஜி, நித்யா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், நித்யாவால் தனது குழந்தையின் எதிர்காலம் பாழாவதாக தாடி பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். #ThadiBalaji #Nithya
    நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    தனியார் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களை நடிகர் கமல்ஹாசன் சேர்த்து வைத்தார். சில மாதங்கள் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தற்போது மீண்டும் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்தநிலையில் தாடி பாலாஜி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என் மனைவி நித்யா போலீஸ்காரர் ஒருவருடன் சேர்ந்து தனது குழந்தையின் வாழ்க்கையை சீரழிக்கிறார்.

    தன் மன உளைச்சலுக்கு போலீஸ்காரர் தான் காரணம். ஏற்கனவே அவர் மீது கொடுத்த புகாருக்கு பழிவாங்க இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை. போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.



    தன்னுடைய குடும்பம் ஒன்று சேர வேண்டும் என தனியார் டிவிக்கு எந்த நோக்கமும் இல்லை. நித்யா டிவி நிகழ்ச்சியில் நடந்து கொண்டது அனைத்துமே நடிப்பு. டிவி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் என்னுடைய அம்மா வீட்டிற்கு தான் சென்றேன். நித்யாவை பார்க்க செல்லவே இல்லை. என் குழந்தையை பார்க்க விடவில்லை. பணத் தேவைக்காக மட்டுமே நித்யா பேசினார்.

    தன் குழந்தைக்கு என்ன தேவையோ அதை ஒரு தந்தையாக செய்ய நான் தயாராக இருக்கிறேன், தன் குழந்தைக்கு (போஷிகா) நித்யா மற்றும் போலீஸ்காரரால் ஆபத்து உள்ளது.

    நடிகர் கமல் குழந்தையின் படிப்பை கவனிக்க சொல்லி அறிவுரை கூறினார். போர்டிங் பள்ளியில் சேர்க்கும் பட்சத்தில் குழந்தையின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்க தயார்.

    நான் நித்யாவிற்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். நித்யா ஜிம் பயிற்சியாளர் மற்றும் போலீஸ்காரர் கட்டுப்பாட்டில் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThadiBalaji #Nithya

    கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகர் தாடி பாலாஜி மீது மீண்டும் போலீஸ் நிலையத்தில் மனைவி நித்யா புகார் செய்து உள்ளார். #Balaji #Nithya
    நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா, தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார்.

    நடிகர் பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக இருவரும் ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நித்யா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கணவர் பாலாஜி மீது புகார் கொடுத்து இருந்தார்.

    இதற்கிடையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜியும், நித்யாவும் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற சக நடிகர்கள் உள்பட பலரும் மகளுக்காக சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறினர். அதை ஏற்று இருவரும் சேர்ந்து வாழ்வதாக அறிவித்தனர். அதன்பிறகு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்று அனைவரும் நினைத்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நித்யா, மாதவரம் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தாடி பாலாஜி மீது மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘பாலாஜி மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்கிறார். கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி குடிபோதையில் வந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்தார். செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுக்கிறார்’ என்று கூறியுள்ளார்.



    மேலும், ‘எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுவரும் நிலையில் குடிபோதையில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நடிகர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனவும் அந்த புகாரில் நித்யா தெரிவித்து இருந்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், நித்யாவிடம் அதற்கான புகார் மனு ஏற்பு ரசீது வழங்கினர். இது தொடர்பாக போலீசார், நடிகர் தாடி பாலாஜியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

    அப்போது அவர், வெளியூரில் சினிமா படப்பிடிப்பில் இருப்பதாகவும், 2 நாட்களில் சென்னை வந்ததும், விசாரணைக்கு வருவதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை நித்யா மேனன், தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். #NithyaMenon #Nithya
    இணையங்களில் வெளியாகும் தொடர்களுக்கு இந்தியா முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தி பிரபலங்களை தொடர்ந்து தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களும் இந்த தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    சென்சார் இல்லை என்பதாலும் குறைந்த பட்ஜெட்டில் தொடரை உருவாக்கி அதிக செலவு இல்லாமல் வெளியிட முடியும் என்பதாலும் இணைய தொடரில் ஆர்வம் காட்டுகிறார்கள். மாதவன் இந்தியில் நடித்த இணைய தொடரான ‘பிரீத்’ தொடர் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



    அதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராக உள்ளது. முதல் சீசனை இயக்கிய மயங் அகர்வால் இந்த சீசனையும் இயக்குகிறார். மாதவனுக்குப் பதிலாக அபிஷேக் பச்சன், அமித்சத் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் இணைந்துள்ளார். இதுவரை திரைப்படங்களில் நடித்து வந்த இவர், இதன் மூலம் இணைய தொடரில் கால்பதிக்க இருக்கிறார்.
    ×