என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maratha"
- குன்பி சமூகத்தினருக்கு வழங்கும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
- கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை ஓபிசி (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) பட்டியலில் சேர்க்க வேண்டும் என அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அரசு ஆலோசித்த வந்த போதிலும் இறுதியான முடிவை எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் குன்பி இனத்தினருக்கு வழங்கும் சான்றிதழ் வழங்க வேண்டும். இலவசக் கல்வி வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திய மனோஜ் ஜராங்கே பாட்டீல் போராட்டத்தை அறிவித்தார்.
அவருடன் ஆயிரக்காணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டக்குழுவினர் நேற்று நவிமும்பையை வந்தடைந்தனர். நவிமும்பையில் போராட்டக்காரர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எங்களது கோரிக்கைகள் ஏற்கடாவிடில், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் நாட்டுவோம் என மனோஜ் ஜராங்கே தெரிவித்திருந்தார்.
#WATCH | Navi Mumbai: Supporters of Maratha quota activist Manoj Jarange Patil celebrate, as he announces an end to the protests today after the government accepted their demands. He will break his fast today in the presence of Maharashtra CM Eknath Shinde. pic.twitter.com/w3e6ve8wLx
— ANI (@ANI) January 27, 2024
இந்த நிலயைில் இரண்டு மந்திரிகள் நேற்றிரவு மனோஜ் ஜராங்கே உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில், மகாராஷ்டிர மாநில அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுள்ளது. போராட்டம் நிறைவு பெறுகிறது என அறிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் வந்து மனோஜ் ஜராங்கேயின் போராட்டத்தை முடித்து வைப்பார் எனத் தெரிகிறது.
தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் குன்பி சான்றிதழ் 37 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் அதன் எண்ணிக்கை 50 லட்சமாக உயரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்