search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malala Yousafzai"

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார்.

    பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி,  2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    மேலும், மலாலா, பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில், தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

    பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார்.

    இந்நிலையில், இங்கிலாந்து பிர்மிங்காமில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று எளிய முறையில் அசார் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.

    தனது திருமண நிகழ்வு குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "இன்று என் வாழ்வின் பொன்னான நாளாகும். அசாரும், நானும் வாழ்க்கையில் இணைய முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம்.

    எங்கள் நிக்கா குடும்பத்தினர் முன்னிலையில் எளிய முறையில் பிர்மிங்காமில் உள்ள வீட்டில் நடந்தது. உங்களது ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள் " என்று குறிப்பிட்டிருந்தார்.


    உலகில் பெண் கல்வியை ஊக்கப்படுத்த மலாலா தொண்டு நிறுவனத்துடன் கைகோர்க்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. #MalalaYousafzai



    உலகில் பெண் கல்வியை ஊக்கப்படுத்த ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர் மையங்கள் மலாலாவின் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.

    பிரேசில் நாட்டில் உள்ள பத்து ஆப்பிள் டெவலப்பர்கள் மையம் மற்றும் மலாலா தொண்டு நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் மலாலா உரையாற்றினார். 

    அப்போது, ஆப்பிள் டெவலப்பர் மையத்திற்கு சென்று திரும்பியதும் நிதி உதவி மூலம் பாதுகாப்பு, தரமான கல்வியை பெண்களுக்கு இலவசமாக வழங்க இந்த நிதி உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

    "நம் உலகை மேம்படுத்துவதில் ஆப்பிள் டெவலப்பர் மைய மாணவர்கள் எனது ஆசையை நிறைவேற்றுவார்கள், அவர்களின் வித்தியாச கற்பனை மூலம் பிரேசில் மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கும் பெண்களுக்கு உதவ முடியும்," என மலாலா தெரிவித்துள்ளார்.



    "ரியோ முதல் ரியாத் வரை ஒவ்வொரு பெண் குழந்தையும் தங்களது எதிர்காலத்தை சொந்தமாக தேர்வு செய்ய வேண்டும் என்பதே எனது நம்பிக்கை," என அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ஆப்பிள் மற்றும் மலாலா தொண்டு நிறுவனம் இணைந்து இந்தியா மற்று லத்தீன் அமெரிக்காவில் நலத்திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தம் செய்தன. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளன. 

    "பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க செய்வதில் மலாலாவின் கனவை நிறைவேற்றுவதில் மலாலா தொண்டு நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது," என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். #MalalaYousafzai 
    ×