என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girls Education"

    • ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது.
    • 67வது விருது வழங்கும் விழாவில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்தியாவின் முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான 'எஜுகேட் கேர்ள்ஸ்' 2025 ஆம் ஆண்டுக்கான ரமோன் மாக்சேசே விருதை வென்றுள்ளது.

    ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் இந்த விருது, சமூக சேவையில் அசாதாரண தைரியத்தையும் தன்னலமற்ற சேவையையும் வெளிப்படுத்திய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் 'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற முதல் இந்திய அமைப்பாக வரலாறு படைத்துள்ளது.

    ராஜஸ்தானில் 2007 ஆம் ஆண்டு சஃபினா ஹுசைன் என்பவரால் தொடங்கப்பட்ட எஜுகேட் கேர்ள்ஸ், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பள்ளி செல்லாத பெண்களுக்கு கல்வி கற்பிக்க செயல்படுகிறது.

    ரமோன் மகசேசே விருது அறக்கட்டளை (RMAF) இன் கூற்றுப்படி, எஜுகேட் கேர்ள்ஸ் 2 மில்லியனுக்கும் அதிகமான பெண்களைப் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

    RMAF மூலம் 2025 வெற்றியாளர்களுக்கு நவம்பர் 7 ஆம் தேதி பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறும் 67வது விருது வழங்கும் விழாவில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  

    உலகில் பெண் கல்வியை ஊக்கப்படுத்த மலாலா தொண்டு நிறுவனத்துடன் கைகோர்க்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. #MalalaYousafzai



    உலகில் பெண் கல்வியை ஊக்கப்படுத்த ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர் மையங்கள் மலாலாவின் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.

    பிரேசில் நாட்டில் உள்ள பத்து ஆப்பிள் டெவலப்பர்கள் மையம் மற்றும் மலாலா தொண்டு நிறுவனத்துடனான ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் மலாலா உரையாற்றினார். 

    அப்போது, ஆப்பிள் டெவலப்பர் மையத்திற்கு சென்று திரும்பியதும் நிதி உதவி மூலம் பாதுகாப்பு, தரமான கல்வியை பெண்களுக்கு இலவசமாக வழங்க இந்த நிதி உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

    "நம் உலகை மேம்படுத்துவதில் ஆப்பிள் டெவலப்பர் மைய மாணவர்கள் எனது ஆசையை நிறைவேற்றுவார்கள், அவர்களின் வித்தியாச கற்பனை மூலம் பிரேசில் மற்றும் உலகம் முழுவதிலும் இருக்கும் பெண்களுக்கு உதவ முடியும்," என மலாலா தெரிவித்துள்ளார்.



    "ரியோ முதல் ரியாத் வரை ஒவ்வொரு பெண் குழந்தையும் தங்களது எதிர்காலத்தை சொந்தமாக தேர்வு செய்ய வேண்டும் என்பதே எனது நம்பிக்கை," என அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக ஜனவரி மாத வாக்கில் ஆப்பிள் மற்றும் மலாலா தொண்டு நிறுவனம் இணைந்து இந்தியா மற்று லத்தீன் அமெரிக்காவில் நலத்திட்டங்களை செயல்படுத்த ஒப்பந்தம் செய்தன. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளன. 

    "பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க செய்வதில் மலாலாவின் கனவை நிறைவேற்றுவதில் மலாலா தொண்டு நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது," என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். #MalalaYousafzai 
    ×