search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lady committed suicide"

    • நிலக்கோட்டை அருகே நோய் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொணடார்
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கொக்குபட்டியை சேர்ந்த செல்லமணி மகள் வீரசின்னம்மாள் (வயது 24). வீரசின்னம்மாளுக்கு கர்ப்பப்பை கோளாறு காரணமாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த வீரசின்னம்மாள் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையில் தூக்குப் போட்டுக் கொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • உடல்நலக்குறைவால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள பெரிய பொன்மாந்துரையை சேர்ந்தவர் டேவிட் பிரான்சிஸ். இவரது மனைவி விஜிலூர்துேமரி (வயது26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

    லூர்து மேரிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் தனது வீட்டிலேயே தூக்கு மாட்டிக் கொண்டார்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை மணியகாரன்பட்டியை சேர்ந்த சந்தனத்துரை மனைவி பாக்கியலட்சுமி(40). கணவர் கூலிவேலைக்கு சென்று அதில் சம்பாதித்த பணத்தை வீட்டுக்கு கொடுக்காமல் இருந்து வந்தார்.

    மேலும் கணவரின் குடும்பத்தினர் பாக்கியலட்சுமியையும் அவரது மகளையும் கொடுமைப்படுத்தி வந்தனர்.

    தொடர்ந்து சித்ரவதை செய்ததால் மனம்வெறுத்த பாக்கியலட்சுமி வீட்டிலேயே உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் சந்தனத்துரை உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கூடலூர் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • உடல்நலக்குறைவால் தொழிலாளி தற்கொலை

    கூடலூர்:

    கம்பம் அருகே சுருளிபட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி(26). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வயிற்றுவலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியில் உள்ள அவரது தந்தை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கூடலூரை சேர்ந்தவர் அர்ச்சனா(20). இவருக்கும் ரவிக்குமார் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவிக்குமார் மது குடித்து வந்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அர்ச்சனா கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மீண்டும் மனைவியை ரவிக்குமார் அழைத்துச்சென்றார்.

    அப்போது அர்ச்சனா வீட்டிலேேய தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×