search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளித்து பெண் தற்கொலை"

    • மனநலம் பாதிக்கப்பட்டவர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த முட்ட வாடி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி அலமேலு (வயது 50). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் பாணாவரத்தை அடுத்த வெளிதாங்கி புரம் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவரது தாயார் முனிரத்தினம் நூறுநாள் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த அலமேலு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில்உடல் முழுவதும் தீ பரவி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அலமேலு இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாணாவரம் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகில் உள்ள கீழமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி சாந்தா(53). கணவர் இறந்துவிட்டதால் தனது மகள் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சாந்தா சம்பவத்தன்று தான் உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

    • குடும்ப பிரச்சினையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை மணியகாரன்பட்டியை சேர்ந்த சந்தனத்துரை மனைவி பாக்கியலட்சுமி(40). கணவர் கூலிவேலைக்கு சென்று அதில் சம்பாதித்த பணத்தை வீட்டுக்கு கொடுக்காமல் இருந்து வந்தார்.

    மேலும் கணவரின் குடும்பத்தினர் பாக்கியலட்சுமியையும் அவரது மகளையும் கொடுமைப்படுத்தி வந்தனர்.

    தொடர்ந்து சித்ரவதை செய்ததால் மனம்வெறுத்த பாக்கியலட்சுமி வீட்டிலேயே உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் சந்தனத்துரை உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×