search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீக்குளித்து பெண் தற்கொலை
    X

    தீக்குளித்து பெண் தற்கொலை

    • மனநலம் பாதிக்கப்பட்டவர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த முட்ட வாடி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி அலமேலு (வயது 50). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் பாணாவரத்தை அடுத்த வெளிதாங்கி புரம் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவரது தாயார் முனிரத்தினம் நூறுநாள் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த அலமேலு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில்உடல் முழுவதும் தீ பரவி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அலமேலு இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாணாவரம் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    Next Story
    ×