search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbhabhishekham"

    • கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார்.
    • அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் ரெயில்வே திருமண மண்டபத்தின் பின்புறம் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், இந்த கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார். அந்த தேங்காயில் 4 சில் இருந்தது.

    வழக்கமாக ஒரு தேங்காய் உடைக்கும் போது அதில் 2 சில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தேங்காயில் 4 சில் இருந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    இந்த அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.

    • 50 பணியாளர்கள் வாயிலாக தொடர்ந்து 45 நாட்களாக யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
    • இக்கோவிலுக்கு கடந்த 1980 மற்றும் 1993 என 2 முறை யாகசாலை அமைக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக கோவில் அருகே பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் யாகசாலை பணிகள் தொடர்ந்து 45 நாட்களாக நடைபெற்று பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இதில் மூலவர், அம்பாள், முருகப்பெருமானுக்கு நவகுண்ட யாகசாலை, பாதிரி அம்மன், காலபைரவர் ஆகிய மூர்த்திகளுக்கு பஞ்ச குண்ட யாகசாலை மற்றும் 37 பரிவார வேதிகை என யாகசாலை ஆகம விதிகள்படி அமைக்கப்பட்டுள்ளது.

    யாகசாலை குறித்து அதன் அமைப்பாளர் மயிலாடுதுறையை சேர்ந்த செல்வம் கூறியதாவது:-

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது அரண்மனை யாகசாலை எனப்படும். 220 அடி நீளம், 100 அடி அகலத்தில் 79 குண்டங்கள், 43 வேதிகைகள் என அமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஆகமவிதிகள்படி அமைக்கப்பட்டுள்ளது. 50 பணியாளர்கள் வாயிலாக தொடர்ந்து 45 நாட்களாக யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    இக்கோவிலுக்கு கடந்த 1980 மற்றும் 1993 என 2 முறை யாகசாலை அமைக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. தற்போது 4-வது தலைமுறையாக யாக சாலை அமைக்கும் பணிகளை செய்து வருகின்றோம்.

    கோவை கோனியம்மன் கோவில், திருவாடுதுறை ஆதீனம், தர்மபுரி ஆதீனம், திருக்கடையூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கும்பாபிஷேகத்துக்கு யாகசாலை அமைத்த புண்ணியம் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×