search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolam"

    • கோலம் போடுவதில் தகராறில் பெண்ணை தாக்கியுள்ளனர்.
    • இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.

    மதுரை

    அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ரவீந்திரநாத் மனைவி பாக்கியலட்சுமி (54). சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் ராஜா மனைவி ருத்ரவல்லி (40) எதிர்ப்பு தெரிவித்தார்.

    இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் பாக்கியலட்சுமி தாக்கப்பட்டார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்ரவள்ளி, அவரது சகோதரர் வன்னிமுத்து சேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே வழக்கில் ருத்ரவள்ளி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியலட்சுமி, அவரது சகோதரி சத்யா, வேலைக்காரர், கார் டிரைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.
    • கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பின் கீழ் வார்டு தோறும் கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் காமராஜர் தெருவில் விழிப்புணர்வு கோல போட்டி நடைபெற்றது.

    இதில் 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.

    இதையடுத்து கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 39-வது வார்டு கவுன்சிலர் எம்.உஷா பரிசுகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஜான்சன், எழில், பிரபு தி.மு.க வட்ட செயலாளர், துப்புரவு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×