என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kochi Water Metro"
- ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான மாணவர்கள் திரண்டு இருந்தனர்.
- கேரளாவில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடப்பட்டதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான மாணவர்கள் திரண்டு இருந்தனர். இதுபோல காசர்கோடு செல்லும் வந்தே பாரத் ரெயிலிலும் மாணவர்கள் அமர்ந்து இருந்தனர். அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் ஏறிய பிரதமர் மோடி அங்கு அமர்ந்து இருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அதன் பிறகு அவர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியம் சென்றார்.
அங்கு கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகம், பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சூரத் புறப்பட்டு செல்கிறார்.
கேரளாவில் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடப்பட்டதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த கொச்சி மெட்ரோ படகுகளில் நாளை முதல் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த படகுகளில் செல்ல குறைந்தபட்சம் ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்