search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keelappavoor"

    • கூடுதலாக ரூ.3,500 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
    • தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடையர்தவணை ஊராட்சி. இதன் தலைவராக லட்சுமி என்பவர் உள்ளார். இங்கு வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு அரசு சார்பில் ரூ.1000 என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.3,500 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி, ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வாயிலில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அறிவிப்பு பேனர் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அங்கு தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையடியூர் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது.
    • சாலை மிகவும் பள்ளங்கள் நிறைந்து உருக்குலைந்து காணப்படுகிறது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூரில் இருந்து மருதடியூர், சாலையடியூர் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது.

    பள்ளி மாணவர்கள், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் என பலரும் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் ரெயில்வே கேட் வரை செல்லும் சாலையும் மிகவும் பள்ளங்கள் நிறைந்து உருக்குலைந்து காணப்படுகிறது.

    எனவே இந்த இரு சாலைகளையும் செப்பனிட்டு தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×