என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Kathiri veyil
நீங்கள் தேடியது "Kathiri veyil"
அக்னி நட்சத்திரம் வெயில் மே 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் நீடிக்கிறது. #kathiriVeyil #AgniNatchathiram
சென்னை:
அக்னி நட்சத்திரம் வெயில் மே 4-ந்தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது.
சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் எனும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம்.
இந்த கால கட்டத்தை ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என்று சொல்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த ஆண்டு மே 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம் நீடிக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டு அக்னி வெயில் காலத்தின் தொடக்கத்தில் 100 டிகிரியில் தொடங்கி 108 டிகிரி வரை சென்றது. திருத்தணி, வேலூர், கரூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டை பொறுத்த வரையில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை சுட்டெரித்தது.
வெயில் உக்கிர காலத்தில் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சீரான வெப்ப நிலை இல்லாதவர்களுக்கு வயிற்றுப் போக்கு, சிறுநீரக கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படும்.
தற்போது குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஊட்டி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இந்த மழை நீடிப்பதால் சற்று வெப்பம் தணிந்துள்ளது. ஆனாலும் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #kathiriVeyil #AgniNatchathiram
அக்னி நட்சத்திரம் வெயில் மே 4-ந்தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது.
சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் எனும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம்.
இந்த கால கட்டத்தை ‘அக்னி நட்சத்திரம்’ அல்லது ‘கத்திரி வெயில்’ என்று சொல்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த ஆண்டு மே 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை மொத்தம் 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலம் நீடிக்கிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21-வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும்.
கடந்த 2018-ம் ஆண்டு அக்னி வெயில் காலத்தின் தொடக்கத்தில் 100 டிகிரியில் தொடங்கி 108 டிகிரி வரை சென்றது. திருத்தணி, வேலூர், கரூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டை பொறுத்த வரையில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி வரை சுட்டெரித்தது.
வெயில் உக்கிர காலத்தில் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சீரான வெப்ப நிலை இல்லாதவர்களுக்கு வயிற்றுப் போக்கு, சிறுநீரக கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படும்.
தற்போது குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஊட்டி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் இந்த மழை நீடிப்பதால் சற்று வெப்பம் தணிந்துள்ளது. ஆனாலும் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் உக்கிரமாகவே இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #kathiriVeyil #AgniNatchathiram
25 நாட்களாக வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இனி வெப்பத்தின் தாக்கம் குறையும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். #kathiriVeyil #AgniNatchathiram
சென்னை:
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.
அதன் பிறகு தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்த தொடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. பகலில் வெப்பத்தினாலும், இரவில் புழுக்கத்தினாலும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
கத்திரி வெயில் காலத்தில் சென்னை, வேலூர், திருத்தணி, கரூர், பரமத்தி உள்ளிட்ட பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது.
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. நேற்று திருத்தணியில் 103 டிகிரி வெயிலும், வேலூரில் 100 டிகிரி வெயிலும் பதிவானது.
கத்திரி வெயில் முடிவடைவது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
கத்திரி வெயிலுக்கும், வானிலை ஆய்வு மையத்துக்கும் தொடர்பு இல்லை. பஞ்சாங்கத்தின் படியே கத்திரி வெயில் கணிக்கப்படுகிறது. தெற்கு அந்தமானில் தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவ மழை தமிழகத்தை நெருங்கி வரும்போது ஈரப்பத காற்று வீசக்கூடும். அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறையும். கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் வெப்பம் மேலும் குறையும்.
வெப்பச்சலனம் காரணமாக வட உள்தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #kathiriVeyil #AgniNatchathiram
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.
அதன் பிறகு தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்த தொடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. பகலில் வெப்பத்தினாலும், இரவில் புழுக்கத்தினாலும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
கத்திரி வெயில் காலத்தில் சென்னை, வேலூர், திருத்தணி, கரூர், பரமத்தி உள்ளிட்ட பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது.
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. நேற்று திருத்தணியில் 103 டிகிரி வெயிலும், வேலூரில் 100 டிகிரி வெயிலும் பதிவானது.
25 நாட்களாக வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இனி வெப்பத்தின் தாக்கம் குறையும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கத்திரி வெயிலுக்கும், வானிலை ஆய்வு மையத்துக்கும் தொடர்பு இல்லை. பஞ்சாங்கத்தின் படியே கத்திரி வெயில் கணிக்கப்படுகிறது. தெற்கு அந்தமானில் தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவ மழை தமிழகத்தை நெருங்கி வரும்போது ஈரப்பத காற்று வீசக்கூடும். அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறையும். கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் வெப்பம் மேலும் குறையும்.
வெப்பச்சலனம் காரணமாக வட உள்தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #kathiriVeyil #AgniNatchathiram
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X