search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "israel airstrike"

    • ரஃபா நகரில் காசாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • இந்த நகரில் மீது தாக்குதல் நடத்தினால்தான் தங்களது முழு நோக்கம் நிறைவடையும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

    காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவின் வடக்குப்பகுதியை ஏறக்குறைய உருக்குலைத்துவிட்டது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. தங்களது இலக்கு முடிந்து விட்டதால் இந்த நகரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போரின் நோக்கம் நிறைவேற ரஃபா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நகரில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ரஃபாவின் அருகில் உள்ள டெல் சுல்தான் நகரின் மேற்கு பகுதியில் மக்கள் வசிக்கும் இடத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் உள்பட 9 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட ஆறு குழந்தைகள், இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் ரஃபாவில் உள்ள அபு யூசெப் அல்-நஜ்ஜர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கட்டிப்பிடித்து உறவினர்கள் கதறியது நெஞ்சை பிளப்பதுபோல் இருந்தது.

    காசா எகிப்பு எல்லையில் அமைந்துள்ளது. காசாவில் மொத்த மக்களை தொகையான 2.3 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டோர் ரஃபாவில் வசித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மற்ற பகுதிகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்துள்ளனர்.

    • நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல் அடிப்படையில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தகவல்.
    • காசா போராளிகளின் முயற்சியை முறியடிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பேச்சு.

    இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் அடிக்கடி ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. உயரமான கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து புகை வெளியேறும் காட்சி குறித்த வீடியோ வெளியானது. 


    தில் மூத்த போராளி உள்பட 10 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதல்கள் இஸ்லாமிய ஜிகாத் போராளிகளை குறி வைத்து நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. காசா மீதான தாக்குதலுக்கு பிறகு தேசிய தொலைக்காட்சி உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் யாசிர் லாபிட், தனது நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

    காசாவில் இருந்து இஸ்ரேல் எல்லையை நோக்கிய எந்தவொரு தாக்குதல் முயற்சியையும் தமது அரசு முறியடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தனது குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்களை கண்டு இஸ்ரேல் சும்மா இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×