search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International terminal"

    • இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.
    • குடியுரிமைச் சோதனை அறைகள், சுங்கச் சோதனை பிரிவு அறைகள் ஆகியவை அகற்றப்பட்டு உள்நாட்டு முனையமாக மாற்றப்படும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம் கடந்த 7-ந்தேதி முதல் முழு அளவில் இயங்கத் தொடங்கியது.

    இதனால் ஏற்கனவே சர்வதேச விமான முனையமாக செயல்பட்டு வந்த, டெர்மினல்-3, மற்றும் டெர்மினல்-4 ஆகியவை கடந்த 10-ந் தேதியில் இருந்து, முழுமையாக மூடப்பட்டு உள்ளது. அடுத்த சில வாரங்களில், டெர்மினல்-3 (டி3)யை இடிக்கும் பணி தொடங்க இருக்கிறது. அது முழுமையாக இடிக்கப்பட்ட பின்பு, சென்னை விமான நிலையத்தின் 2-ம் கட்ட கட்டுமான பணி விரைவில் தொடங்க உள்ளது.

    இதற்கிடையே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தற்போது, பயணிகள் போக்குவரத்து, விமான சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் தற்போதைய உள்நாட்டு விமான நிலையத்தில், இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் உள்நாட்டு விமான சேவைகள் இயக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில், உள்நாட்டு விமான முனையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில், ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்ட டி3 புதிய முனையம் கட்டுமான பணிக்காக, இடிக்கும் நிலையில் உள்ளது. ஆனால் டி4 முனையம் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் நல்ல நிலையில் காணப்படுகிறது. எனவே டி 4 முனையத்தை இடிக்காமல் புதிய உள்நாட்டு முனையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் தற்போது மூடப்பட்டு உள்ள பழைய சர்வதேச முனையமான டி3, டி4 ஆகியவற்றில், உள்ள குடியுரிமைச் சோதனை அறைகள், சுங்கச் சோதனை பிரிவு அறைகள் ஆகியவை அகற்றப்பட்டு உள்நாட்டு முனையமாக மாற்றப்படும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    அடுத்த ஓரிரு மாதங்களில் இப்பணிகள் நிறைவடைய உள்ளது. அதன் பின்பு வருகிற செப்டம்பர் மாதத் தில் இருந்து சென்னையில் உள்நாட்டு விமான நிலையம் இரு பகுதிகளாக இயங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இப்போது உள்நாட்டு முனையமாக உள்ள டி1 முனையத்தில், ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஏர் ஏசியா, ஆகாஷா, அலையன்ஸ் ஏர், ட்ரூ ஜெட் உள்ளிட்ட விமான நிறுவ னங்களின் உள்நாட்டு விமான சேவைகளையும், புதிதாக உருவாக்கப்படும் டி 4 உள்நாட்டு முனையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானங்களையும் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, சென்னை உள்நாட்டு விமான நிலையம், இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதால், சென்னையில் இருந்து கூடுதலாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படும். மேலும் பயணிகளுக்கும் தாராளமாக இட வசதி கிடைக்கும். விமான நிலையத்தில் நெரிசல்கள் குறையும் என்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களுக்கு வாகனங்கள் வந்து செல்ல தனித்தனி வழிகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் தற்போது உள்நாட்டு முனையம் வழியாக வந்து பன்னாட்டு முனையம் வழியாக வெளியேற வேண்டும். விரைவாக சென்றால்தான் சுங்க கட்டணம் இல்லாமல் இலவசமாக செல்ல முடியும் என்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையத்துக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் அமைத்து சோதனை அடிப்படையில் வாகனங்களை இயக்கியதில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

    இந்த நிலையில் பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் இன்று காலை 11 மணி முதல் அமல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, பன்னாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் திரிசூலம் ரெயில் நிலையம் எதிரே உள்ள தற்போதைய வெளியேறும் பாதை வழியாக உள்ளே வந்து, விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பாதை வழியாக வெளியேற வேண்டும்.


    உள்நாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பாதை வழியாக உள்ளே வந்து, தற்போது உள்ள நுழைவு வாயில் வழியாக வெளியேற வேண்டும்.

    உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களின் புறப்பாடு பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்கள் உடனடியாக சென்றுவிடவேண்டும். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களின் வருகை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்ல வரும் வாகனங்கள் அதற்கான வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி, ஏற்றிச்செல்ல வேண்டும்.

    உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களின் நுழைவு பகுதி முகப்புகளில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள் வந்து செல்ல 10 நிமிட இலவச நேரம் தொடர்ந்து அமலில் இருக்கும்.

    இந்த புதிய நடைமுறைக்கு பயணிகள், வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டு உள்ளது. #ChennaiAirport
    ×