search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heavy Flooding In Hogenakkal Falls"

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை முதல் மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மழையினால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு நிர்வரத்து 1 லட்சத்து 92 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இன்று காலை முதல் மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து இருப்பதால் ஒகேனக்கல் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இன்று 40-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்-வேன், பஸ்களில் ஒகேனக்கல் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். #Hogenakkal #Cauvery

    ×