என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Government doctor"
- வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோசூட்டை' வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டார்.
- சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றியவர் அபிஷேக். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஒப்பந்த அடிப்படையில் இந்த ஆஸ்பத்திரியில் பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் அவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அபிஷேக் தனது வருங்கால மனைவியுடன் திருமணத்துக்கு முந்தைய 'போட்டோஷூட்டை' வித்தியாசமாக எடுக்க திட்டமிட்டார்.
அதன்படி தான் பணியாற்றும் பரமசாகர் அரசு ஆஸ்பத்திரியில் போட்டோஷூட் நடத்த முடிவு செய்தார். அப்போது அறுவை சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிக்கு அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், அவருக்கு மணப்பெண் உதவுவது போலவும், அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளி எழுந்து அமர்வது போலவும் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இந்த போட்டோஷூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதும் அதனை பார்த்து அனைத்து தரப்பினரும் டாக்டர் அபிஷேக்கை கடுமையாக கண்டித்தனர்.
கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் டாக்டர் ஒருவர், போட்டோஷூட் நடத்தி மருத்துவ பணிக்கு இழிவு ஏற்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ஆபரேஷன் தியேட்டரில் போட்டோஷூட் நடத்திய டாக்டர் அபிஷேக்கை பணி நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ரேணுகா பிரசாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி பரமசாகர் அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது.
- அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.
சென்னை:
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் எ.தேரணிராஜன் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரோஜா (80). இவர் கடந்த மாதம் 11-ந்தேதி தலையில் காயத்துடன் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மயங்கி கிடந்தததாகத் தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார். சுய விவரங்கள் அனைத்தும் மறந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்துக்கு தையல் போடப்பட்டு சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அவரது முகவரி, குடும்பத்தினர், சொந்த ஊர் எதுவுமே அவருக்கு நினைவில் இல்லை.
அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது.
அதற்கு மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டு வந்த போது திடீரென ஒரு நாள் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சைகள் அவ ருக்கு அளிக்கப்பட்டு பாதிப்பு குணப்படுத்தப்பட்டது. மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சாந்தி, முதுநிலை மருத்துவர் டாக்டர் பிரவீண் குமார், டாக்டர் குடியரசு ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே, அவரது விவரங்களை சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து மூதாட்டியின் உறவினர்களைக் கண்டறிய முயற்சி மேற்கொண்டோம்.
அதன் பயனாக, அவரின் பேத்தி தேன்மொழி அதைப் பார்த்து மருத்துவமனைக்கு வந்தார். அல்சைமர் நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள அந்த மூதாட்டி அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி விடுவதாக அவர் அப்போது கூறினார்.
இதையடுத்து, அந்த மூதாட்டியை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தன் நிலை மறந்த மூதாட்டிக்கு மனித நேயத்தோடு சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- பிரகலாதன் சென்னையில் அரசு மருத்துவராக பணி யாற்றி வருகிறார்.
- சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.
விழுப்புரம்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 45). சென்னையில் அரசு மருத்துவராக பணி யாற்றி வருகிறார். இவர் சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் வரும்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதியது. இதில் கார் தலைக்குப்புற கவிழந்தது. விபத்தில் அரசு மருத்துவர் பிரகலாதன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் இன்று அரசு ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 500 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 250 டாக்டர்களில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 100 டாக்டர்கள் இன்று போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை.
இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனவே கூட்டத்தை சமாளித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதே போல மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 10 டாக்டர்களும், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 20 டாக்டர்களும் பணிக்கு வரவில்லை. இதனால் அங்கும் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதியது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 80 டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 160-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகிறனர். இங்கு புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை சார்பில் பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
டாக்டர்கள் போராட்டம் காரணமாக நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, காங்கயம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் 300 பேர் போராட்டம் காரணமாக இன்று பணிக்கு வரவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதியது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். #DoctorsProtest
ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் 2005-ம் ஆண்டு டாக்டராக வேலை பார்த்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதிராஜன். இவரது மனைவி நல்லம்மாள். 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தெருவில் தண்ணீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் நல்லம்மாள் தலையில் காயம் ஏற்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று ஸ்கேன் எடுப்பதற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக வேலை பார்த்த டாக்டர் ரமேஷ் பரிந்துரைக்க வேண்டுமாம்.
இதனால் ஜோதிராஜன், டாக்டர் ரமேசை அணுகினார். டாக்டர் ரமேஷ், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஸ்கேன் பார்ப்பதற்கு பரிந்துரைக்க ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ஜோதிராஜன், இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதைதொடர்ந்து போலீசாரின் ஆலோசனைப்படி ஜோதிராஜன், ரமேசிடம் ரூ.300-ஐ கொடுக்க சென்றார். ராஜபாளையம் சிவகாமிபுரத்தில் உள்ள தனது மருத்துவமனையில் இருந்த டாக்டர் ரமேசிடம், ஜோதிராஜன் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்து ரமேசை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.சம்பத்குமார், லஞ்சம் பெற்ற அரசு டாக்டர் ரமேசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்