search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே லாரி மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
    X

    லாரி மோதி தலைகுப்புற கவிழ்ந்த காரினை படத்தில் காணலாம்.

    திண்டிவனம் அருகே லாரி மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்த கார்

    • பிரகலாதன் சென்னையில் அரசு மருத்துவராக பணி யாற்றி வருகிறார்.
    • சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.

    விழுப்புரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 45). சென்னையில் அரசு மருத்துவராக பணி யாற்றி வருகிறார். இவர் சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த சாரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் வரும்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதியது. இதில் கார் தலைக்குப்புற கவிழந்தது. விபத்தில் அரசு மருத்துவர் பிரகலாதன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×