search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST fraud"

    • அரசாங்க கருவூலத்திற்கு தவறான இழப்பை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
    • லஞ்சம் கொடுத்து ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெற்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 6 போலி எலக்ட்ரானிக் பைக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.46 கோடி ஜி.எஸ்.டி. வரியை திரும்ப ஒப்படைத்ததாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    போலி எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு பிரிவுகளை தொடங்கிய குற்றவாளிகளுடன் அதிகாரிகள் சதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐதராபாத்தில் உள்ள வளாகத்தின் உரிமையாளர்களிடம் இருந்து மின்சாரக் கட்டணம் வசூலித்து போலி நிறுவனங்களைத் தொடங்கினர் . பின்னர் அவர்கள் போலி மற்றும் ஜோடிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தங்களை சமர்ப்பித்து ஜி.எஸ்.டி. போர்ட்டலில் நிறுவனங்களை பதிவு செய்தனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வரி ஆலோசகர் சிராக் ஷர்மாவுடன் கிரிமினல் சதி செய்து, போலி மற்றும் ஜோடிக்கப்பட்ட விலைப்பட்டியல்கள், இ-வே பில்கள் மற்றும் போலி நிறுவனங்களை உருவாக்கி, இல்லாத நிறுவனங்களை ஏற்கனவே இருப்பதாகக் காட்டி, லஞ்சம் கொடுத்து ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பப் பெற்றனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் இ-பைக்குகளை தயாரிக்காமல், அரசாங்க கருவூலத்திற்கு தவறான இழப்பை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். ஜிஎஸ்டி அதிகாரிகள் மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் கிரிமினல் சதி செய்து, லஞ்சம் வாங்கி, தங்கள் அதிகாரபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்கள் துறையின் விதிகள் மற்றும் நடைமுறைகளை வேண்டுமென்றே மீறி, பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நல்கொண்டா பிரிவு ஜிஎஸ்டி துணை ஆணையர் ஸ்வர்ண குமார், அபிட்ஸ் வட்டத்தின் உதவி ஆணையர் (மாநில வரிகள்) கெலம் வேணு கோபால், மாதப்பூர்-1 வட்டம், வெங்கட ரமணா, துணை ஆணையர் விஸ்வ கிரண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிம்லா :

    இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்துக்கு உட்பட்ட பர்வானுவில் அதானிக்கு சொந்தமான அதானி வில்மர் குடோன் உள்ளது. மாநிலத்தில் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை போன்ற சமையல் பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து குடோனில் மாநில கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன், அங்குள்ள இருப்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    எனினும் இது வழக்கமான சோதனைதான் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதானி நிறுவனத்தின் மொத்த ஜி.எஸ்.டி.யும் வரிகடன் மூலம் நேர் செய்யப்பட்டதாகவும், பணமாக வழங்கவில்லை என்றும் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த சோதனை வழக்கமானது என அதானி நிறுவனமும் தெரிவித்து உள்ளது.

    ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும விவகாரம் இந்திய அரசியலின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் இந்த நேரத்தில் இமாசல பிரதேசத்தில் நடந்த இந்த சோதனை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர். #GST #GSTFraud #Mumbai
    மும்பை:

    தனியார் நிறுவனங்கள் போலி ரசீதுகளை தாக்கல் செய்து ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாங்காத பொருட்களை வாங்கியது போல ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் மராட்டிய மாநிலம் ராய்காட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஜி.எஸ்.டி.யில் ரூ.650 கோடி செலவுக்கான ரசீதுகளை தாக்கல் செய்து, கட்டிய வரியில் ரூ.110 கோடியை திரும்ப பெற்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த நிறுவனத்தை சேர்ந்த ரகேஷ் அனுமன் பிரசாத் (வயது38), அவரது உறவினர் ஆனந்த் (40) ஆகியோர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.110 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்கள் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் வாங்காத பொருட்களுக்கு போலி ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதையடுத்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரகேஷ் அனுமன் பிரசாத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ×