search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foreign tour"

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார்.
    • சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு (31-ந்தேதி) சென்னை திரும்புகிறார்.

    விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார்.

    தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

    இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

    சிங்கப்பூரில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 25-ந்தேதி ஜப்பான் சென்றார். அங்கு ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஜப்பான் நாட்டு தொழில் நிறுவனங்களுடனும் அவர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண் டார்.

    அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும் சென்று பார்வையிட்டார். ஜப்பான் வாழ் தமிழர்களையும் சந்தித்து பேசினார்.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருமாறு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து ஜப்பானில் இன்றும் நாளையும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    அதன் பிறகு வெளிநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு வருகிற 31-ந்தேதி இரவு 10 மணிக்கு (புதன்கிழமை) வந்தடைகிறார்.

    சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்பு கொடுக்க உள்ளனர்.

    • மாணவர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
    • பாஸ்போர்ட்டை பள்ளி கல்வித்துறையில் ஒப்படைக்க வேண்டும்.

    ஈரோடு, ஏப். 12-

    ஈரோடு மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் நடந்த கலைத்திருவிழா, விளையாட்டு போட்டி, மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ-மாணவிகள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    இதன்படி ஈரோடு மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் நகுல், அ.பள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி தனுஜா ஆகியோர் இலக்கிய மன்றம் சார்பில் தேர்வாகி உள்ளனர்.

    காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் ஸ்ரீசாந்த் விளையாட்டு பிரிவு சார்பிலும், பொன்னாத்தா வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி சிந்துஜா, ஊசிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் அய்யப்பன் ஆகியோர் கலை மற்றும் கலாச்சார பிரிவு சார்பிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பி.பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவன் சையது இப்ராஹிம் வானவில் மன்றம் சார்பில் தேர்வாகியுள்ளார்.

    இவர்கள் அனைவரும் தமிழக அரசு சார்பில் வெளிநாடு செல்ல உள்ளனர்.

    இதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. இவர்களின் பெற்றோர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து விபரம், பாஸ்போர்ட் எடுக்க வேண்டியது அவசியம் குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எந்த நாட்டுக்கு எத்தனை நாட்கள் செல்ல உள்ளனர் போன்ற விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    அதே சமயம் சுற்றுலாவுக்கு தேர்வான 6 பேரும் நாளைக்குள் தங்களது பாஸ்போர்ட்டை பள்ளி கல்வித்துறையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×