search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ferries"

    • இன்னும் 10 நாளில் மீன்பிடி தடைக்காலம் முடிய உள்ளது.
    • மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பேராவூரணி:

    தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி முடிய 60 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க நடைபெற மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், மல்லிபட்டினம் துறைமுகத்தில் 147 விசைப்படகுகள் உள்ளது. விசைப்படகுகள் வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மற்ற நாட்களில் நாட்டுப் படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்னும் 10 நாளில் மீன் பிடி தடைக் காலம் முடிய உள்ள நிலையில் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் விசைப்படகுகள் பராமரிப்பு நடைபெற்று வருகிறது.

    மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்த்து புதிய வர்ணம் பூசும் பணிகளை மீனவர்கள் செய்து வருகின்றனர்.

    • மதுரை-ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
    • ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    மதுரை

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்ற ழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் அடுத்து 4 தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டகளில் கன மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சில இடங்களில் லேசான தூரல் மழை பெய்தது. இன்று மதுரையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டி ருந்தது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி-கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

    இன்று காலை முதல் மதுரை நகர் மற்றும்புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தர விட்டார்.

    சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று காலை வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ராஜ பாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. பிற்பகலுக்கு பின் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலோர பகுதிகளான ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதி களில் கடல் காற்று அதிகமாக இருந்தது. இதனால் வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    அவ்வப்போது கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீன வர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    ×