search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Embalam Selvam"

    • பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • மகளிர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து தானம்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை நகரில் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.29 லட்சத்து 95 ஆயிரம் 343 மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் அகிலன், பாஜக விவசாய அணி பொறுப்பா ளர் ராமு, தானம்பா ளையம் பாஜக பிரமுகர்கள் ஞானசேகரன், சக்திவேல், கணேசன் தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், தவளக்குப்பம் கிருஷ்ண மூர்த்தி, முகாம்மிகை நகர் ஐய்யப்பன், சுந்தரமூர்த்தி, ஜி.ஞா னசே கர், ஜனார்த்தனன் மகளிர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.6 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் செம்மண் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • இளநிலை பொறியாளர் சிவஞானம், ஊர் பிரமுகர்கள் சக்திபாலன் லட்சுமி காந்தன் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மணவெளி பூரணாங்குப்பத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கிருஷ்ணசாமி நகரில் ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலும் மற்றும் ரங்கா கார்டன் நகரில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.6 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் செம்மண் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    இதற்கான பணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமார், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், ஊர் பிரமுகர்கள் சக்திபாலன் லட்சுமி காந்தன் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை கடற்கரை காந்தி திடலில் ஸ்வ ஸ்திக் அறக்கட் டளை மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இணை ந்து ஆட்டிசம் நோய் குறித்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்தியது.
    • தங்கும் இடத்துடன் கூடிய இல்லம் மற்றும் போதிய செயல்முறை மருத்துவர்கள் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை காந்தி திடலில் ஸ்வ ஸ்திக் அறக்கட் டளை மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இணை ந்து ஆட்டிசம் நோய் குறித்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்தியது.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்ததுடன், பள்ளி தாளாளர் டாக்டர் வி.ஆர்.சத்தியவண்ணன் எழுதிய 'ஆட்டிசம் ஒரு தெளிவு' பாகம்-2 புத்தகத்தை வெளியிட்டார். அதை அரியாங்குப்பம்

    எம்.எல்.ஏ. பாஸ்கர், அரிச்சுவடி மனநல இயக்குனர் டாக்டர் ஆர்.இளவழகன், டாக்டர் நவசக்தி, டாக்டர் கலையரசி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போ து சபாநாயகரிடம், ஆட்டிசம் குழந்தை களுக்காக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆட்டிசம் குழந்தைகளின் கணக்கெடுப்பு, தங்கும் இடத்துடன் கூடிய இல்லம் மற்றும் போதிய செயல்முறை மருத்துவர்கள் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    மாநாட்டில் டாக்டர்கள் கோபாலகிருஷ்ணன், முரளி, கீதா, தீபா, புண்ணியமூர்த்தி, மகேந்திரன், அரிச்சுவடி மனநல மைய டிரஸ்டி அரசம்மா

    தேவி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    • காரைக்கால் அரசலாற்றில் உள்ள மீன்பிடி விசைப்படகு செல்லும் வழித்தடத்தில் பாறைகளை அகற்றுதல் மற்றும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் சிமெண்ட் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • ரூ.33 லட்சம் மீன்வளத்துறையின் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அர சலாற்றில் உள்ள மீன்பிடி விசைப்படகு செல்லும் வழித்தடத்தில் பாறைகளை அகற்றுதல் மற்றும் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் சிமெண்ட் கான்கிரீட் தரைத்தளம் அமைத்தல் ஆகிய 2 பணிகளுக்கான நிதியானது மீன்வளத்துறையின் மாநில நிதியிலிருந்து செயல்படுத்தப்படவுள்ள மேற்கண்ட பணிகளுக்கான பூமி பூஜை பொதுப் பணி துறை நீர் பாசனம் மற்றும் பொது சுகாதார பிரிவு மூலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.

    அதே சமயம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், திருமுருகன், நிரவி, தியாகராஜன், துணை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், முதன்மை பொறியாளர் சத்திய மூர்த்தி, மீன்வளத்துறை இணை இயக்குனர் தெய்வ சிகாமணி, கண்கா ணிப்பு பொறியாளர் ராஜசேகர், செயற்பொறியாளர் வீரசெல்வம், துணை இயக்கு னர்கள் சவுந்தரபாண்டியன், ஷாஜீமா மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    அரசலாற்றில் உள்ள மீன்விசைப்படகு செல்லும் வழித்தடத்திலுள்ள பாறைகளை அகற்றுத லுக்கான திட்ட மதிப்பு கான்கிரீட் தரைத்தளம் அமைத்தலுக்கான திட்ட மதிப்பு ரூ.33 லட்சம் மீன்வளத்துறையின் மாநில நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.

    • உலக மகளிர் மாத விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தார்கள்.

    புதுச்சேரி:

    அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரஞ்சிட்டி சார்பில் உலக மகளிர் மாத விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் சபாநாயகருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தார்கள்.

    ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரஞ்சிட்டி தலைவர் சதிஷ்குமார் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சரவணன் ரோட்டரிக் துணை கவர்னர் மதிவாணன், கோதை சதிஷ்குமார், அரசமாதேவி, ரவிச்சந்திரன் கேக்வெட்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.

    மேலும் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ரோட்டரிக் முன்னாள் தலைவர்கள் சாதிக், ராம்பிரகாஷ் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், செந்தில், ஏழுமலை, பிரசாந்த், பாபு ராமசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி ஊழியர்கள் மற்றும் அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • மீனவர் நலத்துறை சார்பில், மீனவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் வென்ற மீனவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

    வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா சின்ன வீராம்பட்டினம் சமூதாய நலக்கூட்டத்தில் நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி போட்டியில் வென்ற மீனவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    மீன்வளத்துறை அதிகாரிகள் சின்ன வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
    • போலீஸ்துறை ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கலை மாமணி விருதாளர் சங்கம், ஜோதி சிலம்பம் பயிற்சி மையம் மற்றும் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சிறப்பு விருந்தினராக போலீஸ்துறை ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி வருவாய் அதிகாரி அய்யனார் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிறுவனர் ஆனந்த் ஜோதி சிலம்ப குரு குலத்தின் நிறுவனர் ஜோதி செந்தில்கண்ணன், பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வன்,

    கலைமாமணி விருதாளர் சங்க தலைவர் அரியபுத்திரன் செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த திருவேங்கடம் கணேஷ் கலைவாணி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி வைத்தார்.
    • கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், ஞானசேகர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி வைத்தார்.

    கிராமப் பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ்,மேலாளர் வீரம்மாள், இளநிலை எழுத்தர் செழியன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் சக்திபாலன், கிருஷ்ண மூர்த்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், ஞானசேகர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கான 28 மந்திரங்கள் பெற்றோர்களுக்கான 6 மந்திரங்கள் அடங்கிய தேர்வு வீரர்கள் "எக்ஸாம் வாரியர்" என்ற புத்தகத்தையும் மோடி எழுதியுள்ளார்.
    • ஓவியப்போட்டியில் மாணவர்கள் படிக்கும் நேரம், யோகா, உணவு நேரம், குடும்ப நேரம், ஆகிய மந்திரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    மாணவர்கள் தேர்வுக ளின் போது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க "பரிக்க்ஷா பே சர்ச்சா" என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.

    இதனை அடிப்படையாகக் கொண்டு அவ்வப்போது மாணவர்களுக்கான 28 மந்திரங்கள் பெற்றோர்களுக்கான 6 மந்திரங்கள் அடங்கிய தேர்வு வீரர்கள் "எக்ஸாம் வாரியர்" என்ற புத்தகத்தையும் மோடி எழுதியுள்ளார். மேலும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான அவர்களின் அனுபவங்களையும் உதவிக் குறிப்புக ளையும் பகிர்ந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கிறார்.

    பிரதமர் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி காணொளி காட்சி மூலம் மாணவர்களுடன் உரையாடினார்.

    இந்நிகழ்ச்சியை மையமாக கொண்டு மாணவர்களிடையே கலை மற்றும் ஓவியப் போட்டி ஜனவரி 20-ந் தேதி புதுவையில் நடைபெற்றது. ஓவியப்போட்டியில் மாணவர்கள் படிக்கும் நேரம், யோகா, உணவு நேரம், குடும்ப நேரம், ஆகிய மந்திரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது.

    புதுவையில் உள்ள 4 மாவட்டங்களில் உள்ள சுமார் 3000-க்கும் மேல் அரசு மற்றும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த கலை மற்றும் ஓவிய திறன் கொண்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம் 157 மாணவர்க ளுக்கு பரிசுகள், தேர்வு வீரர்கள் (எக்ஸாம் வாரியர்) புத்தகம், மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஓட்டல் சற்குருவில் நடந்த இந்நிகழ்ச்சியில் செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பா. ஜனதாகட்சியின் மாநில பொது செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    • ஆண்டியார் பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்தனர்.
    • புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் 5 மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதி ஆண்டியார் பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்தனர்.

    இதனை ஏற்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் துரித நடவடிக்கை எடுத்து சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் ஆண்டியார் பாளையம் பகுதியில் ரூ.49.31 லட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

    இந்த புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் 5 மாத காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர் டாக்டர் முரளி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடக்கோட்ட செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் ஜோதி மற்றும் தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர்கள் மணிமொழி சாய் ஆனந்த், மினு, ஷர்மிளா ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ஊழியர்கள் மற்றும் தொகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், சக்திபாலன், ஞானசேகர், முன்னாள் கவுன்சிலர் ராஜா, வாழுமுனி கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, செந்தில் குமார், ரமேஷ், சிவக்குமார், சகாயராஜ், நடராஜன், முத்துராமன், சிவா, செல்வம், பச்சையப்பன், மணி, சேதுபதி, பெருமாள், சடகோபன், சிவராமன், பாண்டியன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதுவை மாநிலத்தில் நகராட்சிகளில் இயங்கி வந்த வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் திட்டமானது தற்போது கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி முதன் முதலில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனம் சார்பாக வீடு தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணி தொடக்க விழா அரியாங்குப்பம் காமராஜர் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராகவும் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை துணை இயக்குனர்கள் கார்த்திக், சிவகுமார் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், ஹெச்.ஆர்.ஸ்கொயர் நிறுவனத்தின் வேளாண் இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில், உழவர் திருவிழா, நாட்டுப்புற கலைவிழா, திருவள்ளுவர் தின விழா ஆகிய முப்பெரும் விழா பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடந்தது.
    • விழாவில் தொடக்கமாக கலைமாமணி தட்சணாமூர்த்தி குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. விழாவையொட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில், உழவர் திருவிழா, நாட்டுப்புற கலைவிழா, திருவள்ளுவர் தின விழா ஆகிய முப்பெரும் விழா பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடந்தது.

    விழாவிற்கு விருதாளர் சங்க நிறுவனச்செயலாளர் தமிழ்வாணன் வரவேற்றார். சங்க பொருளாளர் ஜோதி செந்தில்கண்ணன் தலைமை தாங்கினார். கலைமாமணி நெல்லைராஜன் முன்னிலை வகித்தார். தலைவர் அரியபுத்திரி நோக்கவுரை ஆற்றினார். கலைமாமணி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் தொடக்கமாக கலைமாமணி தட்சணாமூர்த்தி குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. விழாவையொட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உழவு மாமணி விருது கருணாகரன், மறைந்த துளசி மணவாளன், டாக்டர் பாலாஜி கிருஷ்ணசாமி ஆகியோருக்கும், நாட்டுப்புற கலை ரத்னா விருது சிலம்புசேகர், சிவப்பிரகாஷ் ஆகியோருக்கும், திருக்குறள் சுடர் விருது சிறுவன் அமுதன், மாணவி சவுமியா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சகாதேவன், பரமகேது, ராஜாராம், குமார், ராமலிங்கம் மற்றும் சத்திரிய சேனா சேவகத்தின் பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், சுவாதிகிருஷ்ணன், பெரியசாமி, ஆனந்தராஜ், சங்கரன், ரவிக்குமார் ஆகியோர் கல ந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

    விழாவில் கடந்த டிசம்பர் மாதம் புதுவை கடற்கரை பகுதியில் நடந்த கர்லாகட்டை சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குருகுல மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    ×