search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver suicide attempt"

    • சாக்கிநாகா சத் நகர் என்ற பகுதியில் வந்த போது ஓடும் ஆட்டோவில் இருவருக்கும் இடையே திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது.
    • இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு வந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சாக்கிநாகா சண்டி விலி பகுதியை சேர்ந்தவர் தீபக்போர்ஸ் (வயது 33) லாரி டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பஞ்ச்சீலா ஜாமீதர் (30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இருவரும் ஒரு ஆட்டோவில் காட்கோபர் என்ற இடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். சாக்கிநாகா சத் நகர் என்ற பகுதியில் வந்த போது ஓடும் ஆட்டோவில் இருவருக்கும் இடையே திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு வந்தனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த தீபக் போர்ஸ் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து காதலி என்று கூட பார்க்காமல் பஞ்ச்சீலா கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்தார்.

    இதில் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்ட நிலையில் அவர் அலறியவாறு ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். அவர் ரத்த வெள்ளத்தில் ரோட்டோரம் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.

    இதனால் பயந்து போன தீபக் போர்சும் அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசாரிடம் இருந்து அவர் தப்பிக்கவும் முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பஞ்ச்சீலா மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காயம் அடைந்த தீபக் போர்ஸ் ஆகியோரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பஞ்ச்சீலா பரிதாபமாக இறந்தார். தீபக்கிற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஏன்? இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை.

    மனைவியை சேர்க்க கோரி மாமியார் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மோசிக்கீரனார் வீதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. நிர்மலா என்ற மகளும் சிவகுமார் என்ற மகனும் உள்ளனர்.

    நிர்மலாவுக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த செல்லதுரைக்கும் இடையே முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் செல்ல துரையும் ,நிர்மலாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். செல்லத்துரை லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செல்லத்துரைக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகி விட்ட செய்தி நிர்மலாவுக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவருடன் கோபித்துக்கொண்டு நிர்மலா ஈரோட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    இந்நிலையில் செல்லத்துரை நேற்று ஈரோட்டுக்கு வந்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற அவர் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் நிர்மலா கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

    அதன் பின்னர் செல்லதுரை அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் மீண்டும் மாலை மாமியார் வீட்டுக்குச் செல்லத்துரை வந்தார். தனது மனைவியுடன் தண்ணீர் சேர்த்து வைக்குமாறு மீண்டும் கூறினார். அப்போது வீட்டில் விஜயலட்சுமியின் தாய் மல்லிகா மட்டும் இருந்தார்.

    திடீரென செல்லதுரை தான் கொண்டுவந்த பெட்ரோல் கேனை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இனி பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்லத்துரையை தடுத்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் லாரி டிரைவர் செல்லத்துரை மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் செல்லத்துரை ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×