search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cuddalore Port"

    • கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது.
    • இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட னர்.

    கடலூர்:

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் வலுவான நிலையில் கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வரு கின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தீவாக காட்சியளித்து வருகின்றன. கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது. இந்த நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன் வாங்கி சென்று வருவது வழக்கம்.

    இதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் மீன் வியாபாரிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் வருவார்கள் என்பதால் காலை முதல் குடைபிடித்த படி மீன்களை விற்பனை செய்வதற்கு தயார் நிலை யில் இருந்தனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையிலும் இன்று காலை வரையிலும் மிக கனமழை பெய்து வருவதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொது மக்கள் பெருமளவில் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக மீன் வியாபாரி கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட னர். மேலும் ஒரு சில பொதுமக்கள் மற்றும் தங்களுக்கு தேவை யான மீன்களை வாங்கி சென்றதும் காண முடிந்தது.

    கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 6 மணிக்கு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. #StormWarningCage
    கடலூர்:

    வடமேற்கு வங்கக்கடலில், கலிங்கப்பட்டனம் என்ற இடத்திலிருந்து, சுமார் 550 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    மேலும் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் திடீரென்று உள்வாங்கியது. இதுமட்டுமின்றி நேற்று காலை முதல் மதியம் வரை கடலூரில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது‌.

    இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 6 மணிக்கு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. #StormWarningCage



    ×