search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishmongers"

    • மீன்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் பழவேற்காடு மீன் ஏலக்கூடம் முக்கிய மையமாக உள்ளது.
    • மீன் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீன்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் பழவேற்காடு மீன் ஏலக்கூடம் முக்கிய மையமாக உள்ளது.

    இந்த ஏல கூடம் அருகில் மீன் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. அவை அகற்றப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் அதனை வாங்க வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள், மீன் பிரியர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மீன் ஏலக்கூடம் அருகே அகற்றப்படாமல் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது.
    • இதன் காரணமாக மீன் வியாபாரிகள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட னர்.

    கடலூர்:

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் வலுவான நிலையில் கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வரு கின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் தீவாக காட்சியளித்து வருகின்றன. கனமழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி காணப்பட்டது. இந்த நிலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்வமுடன் மீன் வாங்கி சென்று வருவது வழக்கம்.

    இதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் மீன் வியாபாரிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் வருவார்கள் என்பதால் காலை முதல் குடைபிடித்த படி மீன்களை விற்பனை செய்வதற்கு தயார் நிலை யில் இருந்தனர். கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையிலும் இன்று காலை வரையிலும் மிக கனமழை பெய்து வருவதால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்கு பொது மக்கள் பெருமளவில் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக மீன் வியாபாரி கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட னர். மேலும் ஒரு சில பொதுமக்கள் மற்றும் தங்களுக்கு தேவை யான மீன்களை வாங்கி சென்றதும் காண முடிந்தது.

    ×