search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corn Recipe"

    • சோளத்தில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

    பொதுவாக அடை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வீட்டில் பலவகையான அடை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதாவது அரிசி அடை, கார அடை, கம்பு அடை போன்ற பலவகையான அடை செய்து இருப்பீர்கள்.

    ஆனால் சிவப்பு சோள அடை செய்து இருக்கிறீர்களா. ஆமாங்க சோளத்திலும் அடை செய்யலாம். சோளத்தில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளன. இவற்றை நாம் உணவாக உண்ணும் போது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. சிவப்பு சோளத்தை வைத்து எப்படி அடை செய்வது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    சிவப்பு சோளம்- அரை கப்

    துவரம் பருப்பு- கால் கப்

    உளுந்தம்பருப்பு- 2 ஸ்பூன்

    பெருங்காயம்- கால் டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய்- 4

    பெரிய வெங்காயம் -1

    சீரகம்- அரை ஸ்பூன்

    நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப

    கறிவேப்பிலை- சிறிது

    உப்பு- தேவைக்கேற்ப

    செய்முறை:

    சிவப்பு சோளம் மற்றும் பருப்பு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், கறி வேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். ஊற வைத்தவற்றை தண் ணீர் வடித்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம்,உப்பு சேர்த்து கொஞ்சம் கொர கொரப்பாக மிக்சியில் அரைக்கவும்.

    அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கரைத்து வைத்தி ருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும். அதன் மீது எண்ணெய் விட்டு புரட்டி, வெந்ததும் எடுக்கவும். சுவையான சிவப்பு சோள அடையை இப்போது நீங்கள் ருசிக்கலாம்.

    • சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன் இந்த மலாய் கார்ன் க்ரேவி. ஸ்வீட்கார்ன் விரும்பி சாப்பிடுபவர்கள் இதை டிரை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பூண்டு, இஞ்சி - 50 கிராம்

    ஏலக்காய், பட்டை, கிராம் - தலா 1

    சீரகம் - ஒரு டீ ஸ்பூன்,

    குடை மிளகாய் - 1

    பச்சை மிளகாய் - 2

    கருவேப்பிலை -சிறிதளவு

    கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

    ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

    மெத்தி இலைகள் - ஒரு டீ ஸ்பூன்

    செய்முறை

    ஸ்வீட்கார்னை வேக வைத்து எடுத்துகொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். குடை மிளகாயை நறுக்கவும்.

    ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய் சேர்த்து அது வேகும் வரை வதக்க வேண்டும். இதற்கிடையில், மிக்சியில், தக்காளி, பூண்டு, இஞ்சி, கிராம்பு எல்லாவற்றையும் நன்றாக அரைக்க வேண்டும். இதோடு, முந்திரி மற்றும் சிறதளவு ஸ்வீட்கார்ன் சேர்த்தும் அரைக்கவும். அரைத்த விழுதை கடாயில் கொட்டி, அதோடு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    மசாலா நன்றாக வதங்கியதும், அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, வேக வைத்த கார்னை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, கசூரி மேத்தி இலை, கொத்தமல்லி இழை தூவினால் க்ரீமி கார்ன் மசாலா தயார். இதை தோசை, சப்பாத்தி, சாதம் என உங்கள் விருப்பப்படி தொட்டுகொள்ள பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்.

    ×