search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress Padayatra"

    • காங்கிரஸ் பாதயாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென ஒரு நபர் ஓடிவந்து கட்டி பிடித்தார்.
    • அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர்.

    சண்டிகர்:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே இந்த யாத்திரை கடந்து சென்றுள்ளது. கடந்த 6-ம் தேதி அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. அதன்பின் இந்த யாத்திரையானது தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்து வருகிறது.

    லூதியானாவில் கடந்த 14-ம் தேதி நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால், அன்றைய தினம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்ப்பூர் பகுதியில் காலையில் யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. இதில், ராகுல் காந்தியை திடீரென ஒருவர் ஓடி வந்து கட்டி பிடித்துள்ளார். அருகிலிருந்த கட்சி தொண்டர்கள் உடனே அவரை விலக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை யொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகின்றனர்.
    • என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா மாநில அரசை கண்டித்தும் பாதயாத்திரை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை யொட்டி நாடு முழுவதும் காங்கிரசார் பாதயாத்திரை நடத்துகின்றனர்.

    அதன்படி புதுவை யில் உருளையன்பேட்டை, உப்பளம், ராஜ்பவன் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜனதா அரசை எதிர்த்தும், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா மாநில அரசை கண்டித்தும் பாதயாத்திரை நடத்தப்பட்டது.

    வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகிலிருந்து தொடங்கிய பாதயாத்திரைக்கு மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், நிர்வாகிகள் இளையராஜா, தனுசு, ரகுமான், மருதுபாண்டியன், வேல்முருகன், லட்சுமணன், குமரன், ஆறுமுகம், ரமேஷ், ஜெரால்டு, ராஜ்மோகன், பஞ்சகாந்தி, விஜயகுமாரி, பிரதீஸ் இருதயராஜ், ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாதயாத்திரை வெங்கட சுப்பாரெட்டியார் சிலையிலிருந்து புறப்பட்டு கோவிந்தசாலை, காமராஜர் சாலை, நேருவீதி, காந்திவீதி, ரயில்வே நிலையம், உழவர்சந்தை வழியாக மறைமலை அடிகள் சாலை வழியாக மீண்டும் வெங்கடசுப்பாரெட்டியார் சிலையை அடைந்தது.

    புதுவையில் பஞ்சாலை களை திறக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை தர வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், அனைத்து துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது என குற்றம்சாட்டியும் பாத யாத்திரை நடத்தப்பட்டது.

    ×