search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coal Shortage"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
    • என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    கடலூர்:

    என்.எல்.சி. நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு, தற்போது உடனடியாக 80 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது 5 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு 80 ஹெக்டேர் நிலம் கிடைத்தால், நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சாரத்தை சீராக உற்பத்தி செய்ய முடியும்.

    என்.எல்.சி.யால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

    மேலும் வேலைவாய்ப்பில் 20 போனஸ் மதிப்பெண்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதலாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    என்.எல்.சி.யில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் தமிழர்கள். அதுபோல் நிரந்தர தொழிலாளர்களிலும் 83 சதவீதம் பேர் தமிழர்கள் தான் உள்ளனர். தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு இல்லை என்பதில் உண்மை இல்லை.

    நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தால், பற்றாக்குறையான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை உடனடியாக ஈடு செய்ய முடியும். இந்த ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசுக்கு என்.எல்.சி. நிறுவனம் 2 ரூபாய் 30 பைசா என்ற தொகையில் கொடுக்கின்றது. அதே வேளையில் மின்சாரத்தை தமிழக அரசு, வெளிச்சந்தையில் வாங்க வேண்டும் என்றால் யூனிட்டுக்கு 10 அல்லது 12 ரூபாய் கொடுக்க வேண்டும். மேலும் என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாவதற்கு வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுது, மத்திய தொகுப்பில் இருந்து உரிய மின்சாரம் கிடைக்காததால் தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு நிலவுகிறது. #Coalshortage #Powercut
    சென்னை:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள 2 நிலைகளில் 5 அலகுகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அனல் மின் நிலையத்தில் 1வது நிலை 3-வது அலகில் 210 மெகாவாட்டும், 2-வது நிலை 1-வது அலகில் 600 மெகாவாட்டும் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே 2-வது நிலை 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளன. மொத்தம் 1410 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் மேட்டூர் அனல் மின் நிலையத்திலும் பழுது ஏற்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    வழக்கமாக இந்த சமயங்களில் கிடைக்கும் காற்றாலை மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் இருந்தும் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை.

    தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 14,200 மெகாவாட் மின்சாரம் தேவை. இதில் 2,500 மெகாவாட் அளவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மின்சார தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு நிலவுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகலில் 2 மணி நேரமும், இரவு, நள்ளிரவு நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாகவும், அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடி துணைமின் நிலையத்தின் மூலம் மின்சாரம் கிடைக்கும் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவும் பகலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் நகரில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு 3 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவி வருகிறது.

    தேனி மாவட்டத்தில் 3 முதல் 4 மணி நேர மின் வெட்டு நிலவி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் இரவு 3 மணி நேரமும், பகலில் 2 மணி நேரமும் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. நகர் பகுதியில் இரவில் 3 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துகிறது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தினமும் 4 அல்லது 5 முறை மின்சாரம் தடைபடுகிறது. இரவிலும் மின்தடை செய்யப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் பகலில் 3 முறையும், இரவில் 2 மணி நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.

    மதுரையில் 15 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பகல் வேளையிலும், இரவிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கீழப்பாவூர், ஆலங்குளம் பகுதிகளில் மின்வெட்டு காரணமாக அரிசி ஆலைகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சங்கரன் கோவில், புளியங்குடி பகுதியில் விசைத்தறி கூடங்களில் மின்வெட்டு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கிராமப்பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலும், நகர்ப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு அதிகமாகவும் மின்வெட்டு ஏற்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள காற்றாலை களில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மின் வெட்டு நிலவுகிறது.

    தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மணிக்கு ஒரு முறை மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    நேற்று மின்சாரம் நிறுத்தம் என்ற பெயரில் கடத்தூர், ராமியனஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, பொம்மிடி, வெ.முத்தம்பட்டி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    தர்மபுரி மாவட்டத்தில் மாதத்தில் 2 நாட்கள் மின் தடை என்று அறிவித்து மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் மின் தடை ஏற்படுகிறது. இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



    குமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவு இருக்கும். தற்போது காற்றாலையில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் மின்சாரத்தை சுழற்சி முறையில் வழங்கி வருகிறோம். எனவே மின்தடை ஏற்படுகிறது. மின் உற்பத்தி சீரானதும் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Coalshortage #Powercut
    ×