search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Market"

    • சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
    • 2 நாட்களுக்கு மேலானதால் காய்கறிகள் அழுகி சேதமடைந்துள்ளன.

    மதுரை:

    மதுரை மாட்டுத் தாவணியில் சென்ட்ரல் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகள் உள்ளன. மேலும் பலர் மார்க்கெட் பகுதிகளில் சாலையோரங்களில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மதுரை நகரின் பெரிய மார்க்கெட்டாக திகழும் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் இருந்து உணவகங்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆகியோர் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    சென்ட்ரல் மார்க் கெட்டில் மதுரை, திண்டுக்கல், நெல்லை, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    வழக்கமாக முகூர்த்த தினங்களில் சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க கூட்டம் அலை மோதும். நேற்று முகூர்த்த தினம் என்பதால் சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கடந்த 2 நாட்களாக அதிகளவில் காய்கறிகளை கொள்முதல் செய்தனர்.

    ஆனால் கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில் 2 நாட்களாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. காய்கறிகளை வாங்க எதிர்பார்த்த அளவிற்கு சிறுவியாபாரிகள், பொது மக்கள் வர வில்லை. இதனால் மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனையாகாமல் தேங்கின.

    இந்த நிலையில் இன்று காலை தேக்கமடைந்த 5 டன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் அழுகி சேதமடைந்து துர்நாற்றம் வீசியது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், முகூர்த்த நாளையொட்டி அதிகளவில் காய்கறிகளை வெளி மாவட்ட வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்திருந்தோம். ஆனால் தொடர் மழை காரணமாக வியாபாரம் இல்லை. 2 நாட்களுக்கு மேலானதால் காய்கறிகள் அழுகி சேதமடைந்துள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    • மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் மார்க்கெட்டில் 7-ந் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
    • மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியை கண்டித்து நாளை மறுநாள் (7-ந் தேதி) புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.

    இதில் மாட்டுத்தாவணி தக்காளி மற்றும் சீமை காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் வண்டி உரிமையாளர் சங்கம், அழுகும் பொருட்கள் மற்றும் மாத வாடகை வியாபாரிகள் பொதுநல சங்கம், ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன. இது தொடர்பாக சங்க தலைவர்கள் நீலமேகம், முருகன், சேகர், மோகன்ராஜ், கதிரேசன் ஆகியோர் கூறியதாவது:-

    நாங்கள் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் கடந்த 118 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தேசிய பேரிடர் காலத்தில் உயர்த்தப்பட்ட 36 மாத வாடகை உயர்வை ரத்து செய்ய பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த 2016-2017ம் ஆண்டு வரை 14 மாத கால வாடகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    அதேபோல நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும், அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    மேலும் உயர்த்தப்பட்ட வாடகையை திருத்தம் செய்ய வேண்டும். மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் 1836 கடைகள் உள்ளன. இதில் 1000 கடைகளில் எங்கள் சங்க உறுப்பினர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். சென்ட்ரல் மார்க்கெட் என்பது சுடுகாட்டு பகுதியாகும். இங்கு எங்களுக்கு தற்காலிகமாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    அப்போது மத்திய- மாநில அரசுகள் சார்பில் 27 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து 85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு நிதி தரவில்லை என்பதை காரணம் காட்டி அந்த திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட் தொடர்பாக நீதிமன்றத்தில் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் அலட்சியத்தை கண்டித்து வருகிற 7-ந் தேதி கடை அடைப்பு நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×